இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு
கொழும்பு , சனி, 7 நவம்பர் 2009( 17:31 IST )
இலங்கையில் அமலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமலில் உள்ள அவசரகாலச் சட்ட நீட்டிப்பு தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் 95 வாக்குகள் அச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்றும், 17 வாக்குகள் அதற்கு எதிராகவும் பதிவாகின.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இ.மு,கா ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்த நிலையில், இந்த வாக்கெடுப்பில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பங்கெடுகவில்லை.
ஆனால் அவசர காலச் சட்டத்துக்கு எதிராக தாம் வாக்களிப்போம் என அக்கட்சி முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.