இந்தியா - நேபாளம் உள்துறை செயலர்கள் பேச்சு தொடங்கியது
காத்மாண்டு, வெள்ளி, 6 நவம்பர் 2009( 17:59 IST )
இந்தியா - நேபாளம் இடையே உள்துறை செயலர்கள் மட்டத்திலான இரண்டு நாள் பேச்சுவார்த்தை காத்மாண்டுவில் இன்று தொடங்கியது.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை நேற்று மாலையே காத்மாண்டு வந்திறங்கினார்.இந்நிலையில் பிள்ளை மற்றும் நேபாள உள்துறை செயலர் கோவிந்தா குஸும் ஆகியோருக்கிடையே இன்று தொடங்கிய பேச்சுவார்த்தையில் எல்லை பாதுகாப்பு மற்றும் நிர்வாக யுக்திகளை வகுப்பது மற்றும் குற்றவாளிகளை நாடு கடத்துதல் போன்றவை குறித்து இரு தரப்புக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நேபாளத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோவிந்தாவை,பிள்ளை கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.