அண்மையில் காபூலில் உள்ள ஐ.நா. பணியாளர்கள் மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தனது அயல்நாட்டு பணியாளர்கள் சுமார் 600 பேரை வேறு இடத்திற்கு ஐ.நா. மாற்றியுள்ளது.
இவர்கள் அனைவரும் அத்தியாவசியம் அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் என்று காபூலில் உள்ள ஐ.நா. பேச்சாளர் டான் மாக்நார்டன் தெரிவித்தார்.
ஆப்கானில் தற்போதுள்ள ஐ.நா. பணியாளர்கள் மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே என அவர் மேலும் கூறினார்.