வடமேற்கு பாகிஸ்தானிலிருந்து ஐ.நா. பணியாளர்கள் வெளியேற்றம்
இஸ்லாமாபாத் , திங்கள், 2 நவம்பர் 2009( 15:25 IST )
பாதுகாப்பு கருதி வடமேற்கு பாகிஸ்தான் மற்றும் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகமுள்ள பழங்குடியினப் பகுதிகளிலிருந்து தங்களது பணியாளர்களை ஐ.நா. வெளியேற்றியுள்ளது.
இதற்கான அறிவிப்பை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி - மூன் இன்று வெளியிட்டுள்ளார்.அதே சமயம் மேற்கூறிய பகுதிகளில் அவசர தேவைகள் எழுந்தால் அங்கு ஐ.நா. ஊழியர்களின் பணியாற்றுவார்கள் என்றும்,அவ்வாறு பணியாற்ற செல்லும் ஐ.நா. ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரச்னை கருதி பாகிஸ்தானில் பணியாற்றும் தனது சர்வதேச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும்,அவசர மனிதாபிமான நிவாரண மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மட்டும் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.