தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » ஆஸ்திரேலியா: படகு கவிழ்ந்து 23 பேர் பலி (Over 20 feared dead as boat carrying 40 sinks off Australia)
Feedback Print Bookmark and Share
 
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் காகஸ் தீவுகளுக்கு அருகே நேற்று வாழ்விடம் தேடி சுமார் 40 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தில் 23 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, எல்.என்.ஜி பயனியர் கப்பல் மற்றும் தைவான் நாட்டின் மீன்பிடி படகுகள், ஆஸ்திரேலிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீட்புப் பணியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், படகில் வந்து உயிருக்குப் போராடி வருபவர்களைத் தேடி வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

17 பேர் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவிற்குள் புகலிடம் தேடிச் செல்லும் நோக்கில் அவர்கள் படகில் சென்றதாகக் கூறப்படுகிறது.

மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்