சான் சூகியை விடுதலை செய்யக் கோரும் நோக்கத்துடன் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்கி மூன் , இரண்டு நாள் பயணமாக இன்று மியான்மர் சென்றார்.
மியான்மர் எதிர்கட்சித் தலைவரும், நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூகி நீண்ட காலமாக அந்நாட்டு அரசால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.அவர் மட்டுமல்லாது முக்கிய எதிர்கட்சித் த்லைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் , இரண்டு நாள் பயணமாக மியான்மர் வந்துள்ள பான்கி மூன் , சான் சூகி உள்ளிட்டவர்களை விடுவிக்குமாறு ஆட்சியிலுள்ள மியன்மர் இராணுவ தலைவர் தான் ஸ்வேவை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. |