முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரியா இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது.

வடகொரியா ஏற்கனவே பரிசோதித்த பல்வேறு அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அத்துடன் தென்கொரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே போர் மூளக்கூடும் என்ற பதற்றமான சூழ்நிலையும் காணப்பட்டது.

இந்நிலையில் , இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் வடகொரியா இன்று மீண்டும் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இரு ஏவுகணைகளும் வடகொரியாவின் கிழக்கு கடலோர நகரான வான்சனிலிருந்து ஏவப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
உலக அரங்கில் முக்கிய காரியம் ஆற்றும் நாடாக இந்தியா திகழ்கிறது : யு.எஸ்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த இலங்கை அரசு திட்டம் ?
ஜாக்சன் மரணம் : விசாரணைக் குழுவில் மருந்தியல் அமலாக்க அதிகாரிகள்
பாக். : குண்டு வெடிப்பில் 2 போலீஸ் அதிகாரிகள் பலி
13 ஆவது திருத்தம் : சிங்கள கட்சி மிரட்டலுக்கு பணிகிறது இலங்கை அரசு
'இஸ்லாமிய முறைப்படி மைக்கேல் ஜாக்சன் உடல் அடக்கம்'