முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > இலங்கையில் பாலியலில் ஈடுபடுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: ஆஸி. நாளேடு தகவல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இலங்கையில் பாலியலில் ஈடுபடுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: ஆஸி. நாளேடு தகவல்
இருந்தபோதிலும் அவர்கள் தனியாகக் கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படுவது போன்ற இதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் பேணப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்தப் பிரச்னைகள் தம்மைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய கவனத்துக்கு உரியவையாக இருப்பதாகத் தெரிவித்த அவர், நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது சிறிலங்கா அரசியலமைப்பின் கீழேயே மனித உரிமையை மீறும் ஒரு செயலாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது முகாம்களில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.இதற்கு எதிராக மக்களும் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளனர்.குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் தமது இரத்த உறவுகளைச் சந்திப்பதற்காக அவர்கள் மற்றைய முகாம்களுக்குச் செல்வதற்கு முற்படுகின்றார்கள்.ஆனால் இதற்கு படையினர் அனுமதி மறுப்பது பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறான ஒரு சம்பவத்தின் போதே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு அகதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த நாளேடு தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதேவேளையில் இந்த முகாம்களின் நிலைமை படிப்படியாக அபிவிருத்தியடைந்து வருவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவர் நெயில் பூனே, இருந்தபோதிலும் அகதிகள் முகாம்களில் இருந்து வெளியே சென்று வருவதற்கு அனுமதிக்கப்படாமல் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருப்பதுதான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

"இந்த முகாம்களில் உள்ள மக்களில் 80 வீதமானவர்கள் இந்த வருட இறுதிக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பப்பட்டுவிடுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவிக்கின்றது எனச் சுட்டுக்காட்டும் அவர், இருந்தபோதிலும் அது மிகவும் கடினமான ஒரு இலக்காகவே இருக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றார்.
<< 1 | 2 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
எண்டேவர் எரிபொருள் கலன் சீரமைப்பு பணி நிறைவு: நாசா
காந்தி பிறந்த நாளை கொண்டாட யு.எஸ். நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இன பிரச்னைக்கு தீர்வு : அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு மாத கெடு
கத்தாரில் படகு மூழ்கி 16 இந்தியர்கள் பலி
'இலங்கை படையில் மேலும் 50 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவார்கள் '
' போதை மருந்துக்காக கெஞ்சினார் மைக்கேல் ஜாக்சன் '