முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள் > பசுபதிநாதர் கோயில் விவகாரம்: இந்திய அர்ச்சகர்களை மீண்டும் நியமித்தார் பிரச்சண்டா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பசுபதிநாதர் கோயில் விவகாரம்: இந்திய அர்ச்சகர்களை மீண்டும் நியமித்தார் பிரச்சண்டா
நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அர்ச்சகர்களை, அந்நாட்டுப் பிரதமர் பிரச்சண்டா மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளார்.

நேபாளத்தில் கடந்தாண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அந்நாட்டில் ஆட்சி செய்து வரும் மாவோயிஸ்ட் கட்சியினர், அந்நாட்டில் நூற்றாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நடவடிக்கைகளை மாற்றியைக்கும் விதமாக பசுபதிநாதர் கோயிலில் பணிசெய்து வந்த இந்திய அர்ச்சகர்களுக்குப் பதிலாக நேபாளத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமித்து மாவோயிஸ்ட் அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, பல இடங்களில் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தது. இந்நிலையில் நேற்றிரவு நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பிரச்சண்டா, பசுபதிநாதர் கோயிலில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அர்ச்சகர்களை தற்காலிகமாக மீண்டும் நியமிப்பதுடன், அக்கோயிலில் வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புத்தாண்டு தினத்தன்று தங்களால் நியமிக்கப்பட்ட நேபாள அர்ச்சகர்களுடன், பசுபதிநாதர் கோயில் பூட்டை உடைத்து, மாவோயிஸ்ட் தொண்டர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வ‌ன்‌னி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌‌ல் : 5 பொதும‌க்க‌ள் ப‌லி!
ஒபாமா பதவியேற்பு விழாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: எஃப்.பி.ஐ.
அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான்: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சிறிலங்க அரசு
கஸாப் விவகாரம்: ‌பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துர்ரானி நீக்கம்
‌சி‌றில‌ங்க இராணுவ‌த்‌தி‌ன் வரலாறு வ‌ன்‌னி‌யி‌ல் மா‌ற்‌றி எழுத‌ப்படு‌ம்