முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்திய- அமெ‌ரி‌க்க பெ‌ண்ணு‌க்கு 11 ஆண்டுகள் சிறை!  Search similar articles
வீ‌ட்டு வேலை செ‌ய்த பெ‌ண்களை‌க் கொடுமை‌ப்படு‌த்‌திய இ‌ந்‌‌திய- அமெ‌ரி‌க்க‌ப் பெ‌ண்ணு‌க்கு 11 ஆ‌ண்டுக‌ள் ‌சிறை த‌ண்டனை ‌வி‌தி‌த்து அமெ‌ரி‌க்க ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

வீ‌ட்டு வேலை செ‌ய்துவ‌ந்த இரண்டு இந்தோனேஷிய பெண்களை கொடுமை‌ப்படுத்தியதாக வர்ஷா சப்னானி-மஹேந்தர் சப்னானி என்ற இந்திய-அமெரிக்க தம்பதியினர் மீது தொடரப்பட்ட வழக்கில் வர்ஷா சப்னானிக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 25,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

கணவர் மஹேந்தர் சப்னானிக்கு அடுத்தபடியாக தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்த இந்திய தம்பதியினர் அமெரிக்காவில் வாசனைப் பொருட்கள் வர்த்தகம் செய்துவந்தனர். இவர்கள் மீது கடந்த டிசம்பர் மாதம் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாயின.

வீட்டு வேலைகளுக்காக சேர்க்கப்பட்ட இரண்டு இந்தோனேஷிய நாட்டு பெண்கள், தங்களை சப்னானி தம்பதியினர் அடித்து, உதைத்து சித்தரவதை செய்ததாக புகார் செய்தனர்.
மேலும்
கச்சா எண்ணெய் விலை 140 டாலராக உயர்வு!
வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 8 பட‌ை‌யின‌ர் ப‌லி!
நேபாள‌ம்: கொ‌‌ய்ராலா பத‌வி ‌வில‌கினா‌ர்!
கூட‌ங்குள‌த்‌தி‌ற்கான எ‌ரிபொரு‌ள் முழுவது‌ம் வழ‌ங்‌கியா‌‌கி ‌வி‌ட்டது: ர‌ஷ்யா!
அய‌ல்நா‌ட்டவரு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!
ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது!