முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒலிம்பிக் விழாவில் பங்கேற்க வேண்டாம்-புஷ்ஷிடம் வலியுறுத்தல்
சீனாவின் மனித உரிமை மீறல்கள் செயல்பாடுகளை காரணம் காட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தின் 15 உறுப்பினர்கள், பீஜிங் ஒலிம்பிக் போட்டித் துவக்கவிழாவில் கலந்து கொள்ளவேண்டாம் என்று அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இவர்கள் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தில், சீன அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வருகிறது இதனால் ஒலிம்பிக் போட்டித் துவக்க விழாவில் புஷ் கலந்து கொள்வது முறையானதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜன நாயகக் கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியின் நீண்ட கால சீன விமர்சகரான டானா ரோஹ்ராபாக்கர் என்பவரும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

திபெத் மீதான அடக்குமுறை, சூடான் அரசுடனான சீனாவின் நெருங்கிய பொருளாதார உறவு, மதம் மற்றும் மனித உரிமை அமைப்பினர்கள் மீது சமீபத்தில் சீனா நடத்திய அடக்குமுறைகள் ஆகியவற்றை இந்த கடிதத்தில் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
மேலும்
காட்மாண்டில் 259 திபெத்தியர்கள் கைது!
இந்திய நல்லுறவுக்கு காஷ்மீர் தீர்வே அடிப்படை: பாகிஸ்தான்!
ஸ்கார்லெட் உடல் பிரிட்டன் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டது!
மூன்று தவறுகளை செய்துவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்கா!
ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்களை ‌விடு‌வி‌க்க வே‌ண்டு‌ம்: மலே‌சிய அர‌சி‌ற்கு அ‌திக‌ரி‌க்கு‌ம் அழு‌த்த‌ம்!
அ‌ல் கா‌ய்டா பய‌ங்கரவா‌‌திகளா‌ல் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு ஆப‌த்து: ‌சி.ஐ.ஏ.!