பிரிட்டனில் 4 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகவும், அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து வெளியேற்றவே புதிய குடியேற்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்த படுவதாகவும், அதற்கு இந்தியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
லட்சக்கணக்கான வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகும் என்றபோதிலும், ஒவ்வொரு வழக்காக தீர்வுகாணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் லியாம் பய்ர்னே, 'தற்சமயம் ஆயிரம் தொழிலாளர்கள் மீது வழக்கு தொடர ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.
பிரிட்டனில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள 'புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறை' (Point-based Immigration System) யின்படி, பிரிவு 1- பிரிட்டனில் குடியேறுவதற்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரிவு 2- திறமையான தொழிலாளர்களை இலக்காக கொண்டுள்ளது. அவர்களுக்கு உரிய பணிநியமன கடிதமும் தேவை. பிரிவு 5- இசைக் கலைஞர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற தற்காலிக தொழிலாளர்கள் இந்த பிரிவின்கீழ் வருகின்றனர். பிரிவு 4- மாணவர்களுக்கானது; 2009-ம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. பிரிவு 3-ல் இதுவரை எந்தவிதமான திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
கல்வித்தகுதி, முன்பு பெற்ற வருமானம், ஆங்கில மொழிப்புலமை, வயது, பணி முன் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இதற்கான புள்ளிகள் கணக்கிடப்படுகிறது.
|