முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பஹ்ரைனில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!
பஹ்ரைனில் இந்தியர்கள் உட்பட 600 தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களில் இந்த போராட்டம் இரண்டாவது முறையாகும்.

முகமது ஜலால் நிறுவனத்தை சேர்ந்த இந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். இதுதவிர, பஹ்ரைனில் உள்ள ஜாஜி ஹாசன் குழுமம் என்று கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யும் இந்தியர்கள் உட்பட 1,120 ஆசிய தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு தொழிலாளர்கள் சங்க தலைவர் அப்துல்லா மிர்ஷா கூறுகையில், “எங்களது கோரிக்கை மிகவும் சாதாரணமானது. இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் பஹ்ரைன் தொழிலாளாளர்களின் சம்பளத்தை 2.5 சதவீதமும், அயல்நாடவாழ் தொழிலாளர்களின் ஊதியம் 66 அமெரிக்க டாலரும் உயர்த்த வேண்டும். பஹ்ரைன் நாட்டு சொந்த தொழிலாளர்கள் ஓட்டுநர், விற்பனையாளரும் கூட 527 அமெரிக்க டாலரை ஊதியமாகவும், மற்ற படிகளையும் பெறுகின்றனர். ஆனால், அயல்நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் 132 டாலர் முதல் தான் ஊதியம் பெறுகின்றனர்” என்றார்.
மேலும்
சி.பி.எஸ்.இ. தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும்: துபாயில் கோரிக்கை!
அமெரிக்கர்கள் மத்தியில் இந்தியா பிரபலமான நாடு!
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 8 படை‌யின‌ர் ப‌லி!
கொழு‌ம்‌பி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: ஒருவ‌ர் ப‌லி!
மலேசிய பிரதமராக படாவி பதவியேற்பு
சிவநேச‌ன் உடலு‌க்கு‌ப் ‌பிரபாகர‌ன் அ‌ஞ்ச‌லி: ‌சி‌றில‌ங்கா வத‌ந்‌தி அ‌ம்பல‌ம்!