இமயமலைப் பகுதியில் ஒவ்வொரு 10,000 சதுர கிலோ மீட்டருக்கும் 10 முதல் 40 வானிலை ஆய்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று உலக வானிலை ஆய்வு மையங்களின் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது என்ற பகுஜா, இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்களின் பற்றாக்குறையும், போதுமான தகவல்கள் இல்லாததற்குக் காரணம் என்றார்.
பருவநிலை மாற்றத்தினால் இமயமலையில் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று ஐ.பி.சி.சி. அமைப்பு கூறியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், வெப்பநிலை உயர்வு, பனிக்கட்டிகள் உருகுதல், வறட்சி அதிகரித்தல் போன்ற பொதுவான விவரங்கள் மட்டும் போதாது என்றார்.
உலக வங்கி சார்பில் பேசிய டேவிஸ் கிரே, இந்தியா, பாகிஸ்தான், பூடான், சீனா, நேபாளம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களின் எதிர்காலச் சந்ததியினருக்கு குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இமயமலை பற்றிய தகவல்களைச் சேகரித்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
கெளகாத்தி ஐ.ஐ.டி. பேராசிரியர் சந்தன் மஹனட்டா பேசுகையில், பருவநிலை மாற்றத்தினால் கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிட முடியாததற்குக் காரணம் இமயமலை பற்றிப் போதுமான தகவல்கள் இல்லாததுதான் என்றார்.
மேலும், எரிசக்தி அமைச்சகச் செயலர் அனில் ரஷ்தான், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் பேசினர்.
|