முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > சு‌ற்று‌ச்சூழ‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அழிவிலிருந்து புவியைக் காப்போம்!
அதன் விளைவே, பொதுவாக உலகத்தைப் பற்றிக் கவலைப் படாமல் தங்களுடைய பொருளாதார, வல்லா‌ண்மை ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் நடவடிக்கையிலேயே எப்போதும் ஈடுபடும் உலகின் பணக்கார 8 நாடுகளின் அமைப்பும் இப்பிரச்சனையை சிரத்தையுடன் ஏற்று செயலாற்ற முன்வந்துள்ளது.

இதுவரை வெறும் அச்சுறுத்தல் பிரச்சாரமாக மட்டுமே இருந்த புவி வெப்பமடைதலும், வானிலை மாற்றமும், தற்பொழுது அதனை எதிர்கொண்டு சமாளிக்கவும், அந்த மாற்றங்களுக்குத் தக்கவாறு விவசாயம் உள்ளிட்ட இயற்கை சார்ந்து பாரம்பரியத் தொழில்களை மாற்றியமைத்துக்கொள்ள முன்வந்திருப்பது மிகப் பெரிய முன்னேற்றமாகும்.

webdunia photoWD
உரிய காலத்தில் பொழியும் பருவ மழையை மட்டுமே முழுமையாக நம்பி சாகுபடிச் செய்யப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றிலிருந்து மாறி கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றை அதிக அளவிற்கு சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி ம.சா. சுவாமிநாதன் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வானிலை மாற்றத்தை நன்கறிய ஆய்வு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாகும்.

இந்தியா போன்று, விவசாயம் உள்ளிட்ட இயற்கை சார்பு பாரம்பரியத் தொழிலில் பெரும்பான்மை மக்கள் ஈடுபடும் நாடுகளில்தான் பருவ மாற்றத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்ற நிலையில், வானிலை மாற்றங்கள் குறித்த தெளிவான முன்னறிவிப்பைத் துல்லியமாக அளிக்கும் அளவிற்கு அது தொடர்பான ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும்.

2004 ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த ஆழிப் பேரலைத் தாக்குதலிற்குப் பிறகு, அப்படியொரு அச்சுறுத்தலை முன் அறிந்து காத்துக்கொள்ளும் ஆய்வுகளுக்கு மத்திய அரசு முன்னுரிமையளித்து நிதி ஒதுக்கீடு செய்ததுபோல, வானிலை ஆய்வை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்த ஆண்டில் தென் மேற்குப் பருவ மழை சராசரி அளவிற்குப் பெய்யும் என்றுதான் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் சொல்ல முடிகிறதே தவிர, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவிற்கு மழை மாற்றம் இருக்கும் என்று அருதியிட்டுக் கூற முடியவில்லை. ஏனென்றால் அதற்கான காரணிகள் ஏராளம் உள்ளன. மழை பொழிதலை நன்கு முன்னறியாமல் சாகுபடியில் ஈடுபடும் பொழுது இயற்கையின் எதிர்பாரா மாற்றங்கள் விவசாயத்திற்கு பேரழிவாக முடிகின்றது. இப்படி தொடர்ந்து நிகழுமானால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும்.

நமது நாட்டின் ஒட்டு மொத்த உணவுத் தேவையை உள்நாட்டு உற்பத்தியின் மூலம் நிறைவு செய்வதே உண்மையான உணவுத் தன்னிறைவு ஆகும் என்று விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். இறக்குமதியின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிப்பது விபத்தில் முடியும் பேராபத்து உள்ளது.

webdunia photoFILE
தனி மனித அளவிலும், தேச, மாநில, உள்ளூர் அளவிலும் இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கேற்றவாறு வாழ்கையை மாற்றியமைத்துக் கொள்வதும், புவி இயற்கையின் செழுமையை அழியாமல் காப்பதும் ஒரே திக்கில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கையாகும்.

மானுடம் இணைந்து செயல்படும் ஒரு வாய்ப்பை இயற்கை அளித்துள்ளது என்று ஏற்று, எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட்டு நம்மை வாழ வைக்கும் இயற்கையை காத்திடுவோம்.
<< 1 | 2 
மேலும்
காற்று மாசினால் பூக்கள் நறுமணம் இழக்கின்றன!
பருவமழை சராசரி அளவாக இருக்கும்!
தட்ப வெப்ப மாற்றத்தால் மன நோய்- உலக சுகாதார அமைப்பு!
வானிலை மாற்றத்தால் தொற்றுநோய் அபாயம் : உலக சுகாதார அமைப்பு!
இந்த ஆண்டு வெப்பநிலை குறைவாகவே இருக்கும்: ஐ.நா!
பருவநிலை மாற்றத்தில் ஐ.நா. நாடகமாடுகிறது: விஞ்ஞானிகள் சாடல்!