முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > சு‌ற்று‌ச்சூழ‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அழிவிலிருந்து புவியைக் காப்போம்!
இன்று புவி தினம

நம்மையும், நமக்கு முன்னோடியாகத் திகழ்ந்த தாவரங்களையும், இதர ஜீவ ராசிகளையும் உருவாக்கி, வாழ வைத்துவரும் இயற்கையின் தொட்டிலாகத் திகழ்ந்துவரும் இப்புவியைக் காப்போம் என்று 1970 ஆம் ஆண்டு முதல் ஒரு சர்வதேச நாளாக புவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

webdunia photoFILE
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற (செணட்) உறுப்பினர் கேலார்ட் நெல்சன், நமது சுற்றுச் சூழலில் ஏற்பட்டுவரும் சிரழிவைத் தடுத்து நிறுத்த ‘சுற்றுச் சூழலைப் பற்றி கற்பிப்போம்’ எனும் பொருளுடன்தான் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த இயக்கத்தைத் துவக்கினார்.

அன்றைக்கு சுற்றுச் சூழலைக் காப்போம் என்ற குறிக்கோளுடன் துவங்கிய அந்த இயக்கம், இன்று நாம் வாழும் இப்புவியைக் காப்போம் எனும் விரிவான நோக்கம் கொண்ட நாளாக ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளிற்கு இந்த அளவிற்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் அதிகரிக்கக் காரணம்? புவி வெப்பமடைதலால் ஏற்பட்டு வரும் வானிலை மாற்றமும், அதன் காரணமாக அதிகரித்துவரும் பனிப்படல உருகலும், அதனால் ஏற்படும் நீர் பெருக்கு கடல் மட்டத்தை உயர்த்துதலும், மற்றொரு பக்கத்தில் பருவ நிலை மாற்றத்தால் காலம் தவறி மழை பொழிதலும், வெள்ளப் பெருக்கும் முன் எப்போதும் காணாத அளவிற்கு ஏற்படுத்திவரும் சிரழிவு மானுடத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கியுள்ளது.

வட, தென் அமெரிக்க கண்டங்களிலிருந்து ஆசியா வரை கடந்த சில ஆண்டுகளாக இயற்கையின் சுழற்சியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் - பருவம் தவறிய மழைப் பொழிவும், அபரிதமான வெள்ளப் பெருக்கும் - மக்களின் முறை சார்ந்த வாழ்வை பெரிதும் பாதித்துள்ளது.

webdunia photoFILE
வட, தென் துருவங்களான ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப் பாறைகள் உருகுவது சராசரி அளவுகளை விட அதிகரித்திருப்பது அங்கு வாழும் அரிய வகை உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதென்றால், பருவம் தவறி மழை பொழிவதும், எதிர்பாராத காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றத்தால் உருவாகும் புயல், மழையால் உண்டாகும் வெள்ளப்பெருக்கு விவசாயத்தை திக்குமுக்காடச் செய்துள்ளது.

இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சியுற்றுள்ள மானுடம், நமது வாழ்வாதாரமாக திகழும் இயற்கையைக் காக்க இப்புவியைக் காக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டில் புவி மேல் பரப்பின் வெப்ப அளவு 0.74 டிகிரி ஃபாரன்ஹீட் (0.18 டிகி‌ரி சென்டிகிரேட்) அதிகரித்துள்ளதென வானிலை மாற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறுகிறது. இந்த வெப்ப நிலை மாற்றமே இந்த அளவிற்கான பாரிய அழிவை ஏற்படுத்துமென்றால், புவியின் வெப்ப நிலை மேலும் அதிகரித்தால் அது இயற்கையை இல்லாமல் ஆக்கவிடும் என்கின்ற ஆபத்தை மானுடம் உணர்ந்துவிட்டது.
1 | 2  >>  
மேலும்
காற்று மாசினால் பூக்கள் நறுமணம் இழக்கின்றன!
பருவமழை சராசரி அளவாக இருக்கும்!
தட்ப வெப்ப மாற்றத்தால் மன நோய்- உலக சுகாதார அமைப்பு!
வானிலை மாற்றத்தால் தொற்றுநோய் அபாயம் : உலக சுகாதார அமைப்பு!
இந்த ஆண்டு வெப்பநிலை குறைவாகவே இருக்கும்: ஐ.நா!
பருவநிலை மாற்றத்தில் ஐ.நா. நாடகமாடுகிறது: விஞ்ஞானிகள் சாடல்!