பருவநிலை மாற்றத்தை உருவாக்கும் பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்த ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்டுள்ள இலக்குகள் போதுமானதாக இல்லையென்றும், இதனை மேற்கொள்ள தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியாவும், சீனாவும் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆலோசகர் ராஸ் கார்னட் கூறியுள்ளார்.
புவி வெப்பமடைதல் மற்றும் வானிலை மாற்றத் தடுப்பிற்கான ஐ.நா.வின் குழு தனது இடைக்கால அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது. மேலும் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தை தடுப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயங்கரத்தை தடுப்பது இயலாத காரியமாக போய்விடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பாக உருவாகும் சீர்கேடுகளின் நிலை நாம் முன்பே எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
பருவநிலையில் மாற்றத்தை உருவாக்க கூடிய திறனைப் பெற்றுள்ள பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ள ஒப்பந்தத்தில் இருந்து இன்னும் கூடுதலாக நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இதற்கு வளரும் நாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேன்பேராஸ் அமைப்பின் மூத்த ஆலோசகர் ராஸ் கார்னட் தெரிவித்து உள்ளார்.
மண்டல மற்றும் நாடுகள் அளவில் கார்பன் அளவைக் கட்டுப்படுத்த இரண்டு குழுக்கள் அமைக்க வேண்டும் என்று அந்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . வாயு மண்டலத்துக்கு வெளியேற்றப் படும் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதில் உலகம் முழுவதும் உள்ள நாடுகளால்
|