முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > ம‌க்க‌ள் ‌மீது அ‌க்கறை கொ‌ண்ட வேதாள‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌க்க‌ள் ‌மீது அ‌க்கறை கொ‌ண்ட வேதாள‌ம்
விக்ரமாதித்தன் கதை - பாகம் 2

கொழும்பு காடுகளுக்குச் சென்று வேதாளத்தைச் சந்தித்து உரையாடி (பேட்டி கண்டு) நீண்ட நாளாகிவிட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த வேதாளம் லக்க லக்கவென சிரித்ததைக் கேட்டு மதியத் துகில் கலைந்து எழுந்த விக்ரமாதித்தன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேதாளம் சிரித்ததற்கான காரணத்தை வினவினான்.

‘கிளிநொச்சி என் கையில் விழுந்துவிட்டது’ என்று கூறி மீண்டும் லக்க லக்கவென சிரித்தது வேதாளம். கிளிநொச்சி விழாதா என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமாதித்தனுக்கு முகம் மலர்ந்தது.

ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றிக்காக வேதாளத்திற்கு வாழ்த்துக் கூறிய விக்ரமாதித்தன், அடுத்தது என்னவென்று கேட்க, சற்றே எகத்தாளத்துடன் சிரித்த வேதாளம், அடுத்தது ஆனையிரவு என்று செருக்குடன் கூறியது.

‘இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த விடுதலைப் புலிகள் போவதற்கு இடமின்றி முல்லைத் தீவில் ஒடுங்கிவிடுவார்கள்’ என்று மிக பாசிடிவாக கூறிய வேதாளம், தனது இராணுவ தாக்குதலினால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற கட்டளை நிறைவேற்றப்பட்டதாகக் கூறியதும் விக்ரமாதித்தனால் சற்றும் நம்ப முடியவில்லை.’Zero civilian casualty policy’ என்று ஆங்கிலத்தில் அதனை வேதாளம் சொன்னபோது ஆச்சரியத்தில் மூழ்கினான் விக்ரமாதித்தன்.

எப்படி... எப்படி... ஒரு அப்பாவி தமிழன் கூட கொல்லப்படாமல் எப்படி விமானத்தில் இருந்து குண்டு வீசினாய் என்றோ, கொத்துக் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் கூட ஒரு உயிர்கூட பலியாகாமல் எப்படி சாதித்தாய் என்று விக்ரமாதித்தன் கேட்கவில்லை.

PUTHINAM
சிங்கள போர்ப்படை விமானங்கள் நடத்திய கொத்துக் குண்டு வீச்சில் ஏராளமான கால்நடைகள் ஒரே இடத்தில் கொல்லப்பட்ட படங்கள் ஊடகங்களில் காட்டப்பட்டதே என்றோ அல்லது இரணைமடு, பரந்தன் பகுதிகளில் நடத்திய விமானக் குண்டு வீச்சில் ஏராளமான தமிழர்கள் கையிழந்து காலிழந்து உயிரிழந்து குடல் சரிந்து செத்துக் கிடந்த காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் காட்டப்பட்டதே அதெல்லாம் பொய்யா என்றும் விக்ரமாதித்தன் கேட்கவில்லை.

அப்படியெல்லாம் கேள்வி கேட்டால் வேதாளத்திற்கு கதை சொல்லும் மூடு போய்விடுமல்லவா.. எனவே பேசவில்லை.

வேதாளம் பேசியது... சாரி தொடர்ந்து கதை விட்டது.

கிளிநொச்சியில் மட்டுமல்ல, இதற்குமேல் எல்லா இடத்திலும் இதே ‘கொ‌ள்கைதான்’ என்று கூறிய வேதாளத்தின் குரலில் திடீரென்று சோகம் கப்பியது. என்ன... என்ன... ஆனது மதிப்பிற்கு‌ரிய வேதாளமே என்று விக்ரமாதித்தன் கேட்க,அங்கே... பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது பார்த்தாயா? ஹாரிபிள் என்று ஆங்கிலத்தில் துக்கத்துடன் கூறியது.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
எல்லைத் தாண்டிய மனிதாபிமானம்!
தமிழருக்கு கா‌ங்‌கிர‌ஸ் இழைக்கும் துரோகம்
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: மதச்சார்பின்மைக்கு பின்னடைவு!
தமிழனை விட உயர்ந்தது ஆட்சி
இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்
தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!