முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: மதச்சார்பின்மைக்கு பின்னடைவு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: மதச்சார்பின்மைக்கு பின்னடைவு!
PTI
அரசாணை திரும்பப்பெற்றதும் காஷ்மீரில் கலவரம் ஓய்ந்தது. ஆனால், அரசாணையை திரும்பப்பெற்றதைக் கண்டித்து இந்துக்கள் அதிகம் உள்ள ஜம்மு பகுதியில் கிளர்ச்சியும், கலவரமும் வெடித்தது. இங்கும் கலவரத்திலும், காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கும் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஒருவர் தன்னை எரித்துக்கொண்டு எதிர்ப்புக் காட்டி உயிரை விட்டார். அவருடைய விதவை மனைவி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

காஷ்மீர் தலைநகருக்குச் செல்லும் தேச நெடுஞ்சாலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்தனர். இதனால் காஷ்மீர் பகுதிக்கு அத்‌தியாவசியத் தேவை பொருட்கள் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது காஷ்மீர் பகுதியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியத

தேர்தலிற்குப் பிறகு புதிதாக பதவியேற்கும் அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் என்ற உடன்படிக்கையோடு ஜம்முவில் கலவரத்திற்கு (பேச்சுவார்த்தையின் மூலம்) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்தப் பின்னனியில்தான் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் ஆணையத்தின் சீரிய முயற்சியால் - வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, இப்படி முடிவுகள் வந்துள்ளன.

PTI
நில ஒதுக்கீடு விடயத்தை மிகப்பெரிய பிரச்சனையாக ஊதிப் பெரிதாக்கிய உமர் அப்துல்லாவின் (இதில் ஃபரூக் மாறுபட்ட பார்வை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவர் முதல்வராக இருந்தபோதுதானே அமர்நாத் கோயிலிற்கு நில‌ம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது) தேசிய மாநாடு தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது (இடங்கள் எண்ணிக்கை மாறவில்லை, அதே 28 தான்).

உமரைத் தொடர்ந்து அப்பிரச்சனையை கையிலெடுத்த மேலும் ஊதிப் பெரிதாக்கிய மொஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இடங்களைக் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

அமர்நாத் கோயிலிற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உத்தரவை மீண்டும் பிறப்பிக்க வேண்டும் என்று கட்சி ரீதியாகவும், பொது அமைப்பையும் உருவாக்கி போராடிய பாரதிய ஜனதா கட்சி 10 இடங்களை கூடுதலாக கைப்பற்றியுள்ளது.

மதச்சார்பற்ற கொள்கை கொண்ட அகில இந்தியக் கட்சி என்று பறைசாற்றிக்கொண்டு, பிறப்பித்த உத்தரவை அரசியல் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெற்ற காங்கிரஸ் கட்சி 3 இடங்கள் குறைவாக வென்றது மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ஜம்முவிலும் மிகப் பெரிய அளவிற்கு வாக்குச் சரிவை சந்தித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அமைச்சரவையில் ஒருமித்து ஒப்புக்கொண்டு பிறப்பித்த அரசாணையை கடைசிவரை (ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று) உறுதியுடன் இருந்திருந்தால், ஜம்முவிலும், தெற்கு காஷ்மீரிலும் அக்கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அரசியலிற்காக மதச்சார்பின்மையை ஒரு அடையாளமாக மட்டுமே கொண்டு செயல்பட்டதால், இரு தரப்பு மக்களிடமிருந்தும் காங்கிரஸ் கட்சி அன்னியப்பட்டுவிட்டது.

PTI
ஆக, ஜனநாயக ரிதியிலான ஒரு தேர்தலாக இது தெரிந்தாலும், அதன் முடிவு ஜம்மு-காஷ்மீர் மக்களின் மத ரீதியிலான எண்ணத்தையே பிரதிபலித்துள்ளது. இது அம்மாநில சட்டப்பேரவையிலும் பலமாக பிரதிபலிக்கலாம்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தோற்றது மதச்சார்பின்மையே.
<< 1 | 2 | 3 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தமிழனை விட உயர்ந்தது ஆட்சி
இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்
தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் சகோதரர்களே!
பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
வெப்துனியா ஆய்வு 2008