முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சேது சமுத்திரத் திட்டமும் - ராமர் பாலமும்!
சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் கடற்பகுதியில் உள்ள நிலத்திட்டுகள் இராமர் பாலம்தானா என்பதை தொல்லியல் துறையின் ஆய்விற்கு உட்படுத்தி, அதனை ஆய்வு செய்யும் சாத்தியம் உள்ளதா என்று பரிசீலிக்கும்படி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள அந்த நிலத்திட்டுகள் இயற்கையாய் அமைந்தவையா அல்லது இராமர் பாலமா என்பதை புவியியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து ஓராண்டிற்கு முன்னர் (2007 மே 11ஆம் தேதி) வெப்உலகம்.காம்-ல் வெளியிட்ட கட்டுரை கீழே தந்துள்ளோம்.

- ஆசிரியர்

தமிழகத்தையும், இலங்கையையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டுக்களை ராமர் கட்டிய பாலம் என்றும், எனவே சேது சமுத்திர நீர் வழித் திட்டத்திற்காகக் கடலை ஆழப்படுத்தும் போது அதற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் கூறி ஒரு புதிய பிரச்சனையை பா.ஜ.க. உள்ளிட்ட மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளும், இயக்கங்களும் உருவாக்கி வருகின்றன!

webdunia photoFILE
கடலில் மூழ்கியுள்ள அந்த நிலத் திட்டுக்களின் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்ட நாள் முதல் இதுதான் ராமர் கட்டிய பாலம் என்று மதவாத இயக்கங்கள் கூறி வருகின்றன. புராணத்தைத் தவிர, வேறு எந்தவிதமான ஆதாரமும் இன்றி பிரச்சனையை உருவாக்கிய இந்த இயக்கங்கள், தற்பொழுது நாடாளுமன்றத்திலும் அதனை "முக்கிய" பிரச்சனையாக்கியுள்ளன.

பா.ஜ.க., சிவ சேனா, சங்கராச்சாரிகள் ஆகியோர் எழுப்பியுள்ள இப்பிரச்சனையை நோக்குவதற்கு முன்பு, தமிழகத்தையும், இலங்கைத் தீவையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள அந்த நிலத் திட்டு மனிதரால் உருவாக்கப்பட்ட பாலம்தானா என்பதை ஆராய வேண்டும்.

புவியியல், பூகோளவியல் ஆகியவற்றை படித்த மாணவர்களுக்கு இப்படி பெரும் நிலப் பகுதிகளை இணைத்திடும் நிலத் திட்டுக்கள் குறித்து படித்திருப்பார்கள். உதாரணத்திற்கு, தென் அமெரிக்க கண்டத்தையும், வட அமெரிக்க கண்டத்தையும் மெல்லியதாய் இணைக்கும் நிலப்பகுதியே இன்றைக்கு பணாமா நாடு என்று குறிக்கப்பட்டிருப்பதை உலக வரைபடங்களில் பார்க்கலாம். இந்த பணாமா நாட்டிற்கு இடையேதான் பணாமா கால்வாய் (நீர் வழி) வெட்டப்பட்டு பசுபிக் பெருங்கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலிற்குச் செல்லும் கப்பல்கள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

webdunia photoFILE
பணாமா கால்வாய் மட்டும் இல்லாமல் போனால், பசுபிக் கரையோரப் பகுதியில் உள்ள அமெரிக்க துறைமுகங்களில் இருந்து அந்நாட்டின் கிழக்குப் பகுதியில், அதாவது அட்லாண்டிக் கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டிய கப்பல்கள் தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக்கொண்டுதான் சென்றிருக்க வேண்டும். அதாவது, பல்லாயிரம் மைல்கள் கூடுதலாக பயணம் செய்திருக்க வேண்டும். அதனைத் தவிர்க்கத்தான் பணாமா நீர் வழி வெட்டப்பட்டு கப்பல்களின் பயண தூரமும், நேரமும் சுறுக்கப்பட்டது.

இப்படி இரண்டு பெரிய கண்டங்களை அல்லது நிலப்பகுதிகளை இணைக்கும் மெல்லியதான நிலப்பகுதியைத்தான் புவியியலிலும், பூகோளவியலிலும் இஸ்மஸ் (Isthmus) என்று அழைப்பார்கள். இப்படி இஸ்மஸ் என்றழைக்கப்படும் பெரும் நிலப்பகுதிகளை இணைக்கும் மெல்லிய நிலப்பகுதிகள் உலகில் ஏராளம் உள்ளன. அவைகள், கடலில் மூழ்கியோ அல்லது சற்று மேலே நிலத் திட்டுக்களாகவோ அல்லது ஒன்றிணைந்து கோர்வையாக தீவுகளாகவோ உள்ளன.
1 | 2 | 3  >>  
மேலும்
இராமர் பாலம் : நம்பிக்கையின் பெயரால் நீதிக்கு மிரட்டல்!
மே தினம்!
விலையேற்றம் : பிரதமரின் திசைதிருப்பல்!
ரஷ்யாவிற்காக விண்ணில் பறந்த நாய்!
தூக்கு தண்டனை: கருணைக்கும் விலையுண்டு!
6 மாதத்தில் கடுமையான ‌விலையேற்றம் - ஒரு பா‌ர்வை!