முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இராமர் பாலம் : நம்பிக்கையின் பெயரால் நீதிக்கு மிரட்டல்!
webdunia photoFILE
சேது சமுத்திர கால்வாய் திட்டப்பகுதியில் இருக்கும் நிலத் திட்டுகள் இராமர் பாலம் என்று அறுதியிட்டுக் கூறுவதற்கு ஆதாரமேதுமில்லை என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்ததால்தான், நம்பிக்கையை இவர்கள் கையிலெடுத்துள்ளனர். அந்த வாதம் எந்த அளவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஏசு கிறிஸ்து இந்த இடத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறித்தவ மக்கள் நம்பும் இடத்தைப்பற்றி நீதிமன்றம் விசாரணை நடத்த முடியுமா என்று ஒரு கேள்வியை எழுப்புயுள்ளார் வழக்கறிஞர் வேணுகோபால். இந்தியாவிற்குள் நிறைவேற்றப்படவுள்ள ஒரு திட்டத்தை முடக்க, நமது நாட்டிற்கு சம்மந்தப்படாத ஒரு நாட்டிலுள்ள, வேறொரு மதத்தின் புனித தலத்தை கேள்விக்குட்படுத்தி தங்கள் வாதத்திற்கு நியாயம் தேட முற்பட்டுள்ளார்கள்.

இராமர் மீதும், இராமாயணம் மீதும் இந்திய மக்கள் கொண்டுள்ள பக்தியும் பற்றுதலும் (Faith), இவர்கள் கூறும் நம்பிக்கை எனும் சாதாரண அடிப்படையை விட அர்த்தமுள்ளவை, பலமானவை ஆகும். ஸ்ரீ இராம அவதாரத்தின் ஆன்மிக நோக்கத்தை இராமாயணம் மூலம் அறிந்தவர்கள் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள். சோதனையிலும் தன்னிலையிழக்காமல் அவர் காட்டிய அளவற்ற பொறுமையை பெருமைக்கு‌ரிய உதாரணமாக இன்றளவும் மக்கள் ஏற்றுப் போற்றுகின்றனர்.

அதே நேரத்தில் தாங்கள் வணங்கும் தெய்வத்தை அரசியலாக்கும் முயற்சிகளை அறியாதவர்கள் அல்லர் நம் மக்கள். அதனால்தான், இராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என்று கூறி பாபர் மசூதியை இடித்த மதவாத அரசியலை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். அப்படிப்பட்ட சக்திகள்தான் இன்றைக்கு இராமர் பாலம் பிரச்சனையை எழுப்புகிறது என்றும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இந்திய மக்கள் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே ஆனாலும், அவர்கள் மற்ற மதங்கள் கூறும் கடவுள்கள் மீதும், நம்பிக்கைகளின் மீதும் மதிப்பு வைப்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு பண்பாட்டு அடிப்படையை இந்த நாடு இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டு போற்றி வருகிறது.

இந்திய நாட்டின் ஆன்மிகமே அதன் பண்பாட்டிற்கும், வாழ்க்கைக்கும் பலமான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று ‘இந்திய பண்பாட்டின் அடித்தளங்கள்’ என்ற நூலில் ஸ்ரீ அரவிந்தர் மிக ஆழமாக எழுதியுள்ளார். இப்படிப்பட்ட ஆன்மிக முன்னோடிகளின் வழிகாட்டுதல்களே நமது மக்களை காலம் காலமாக பண்படுத்தி வந்துள்ளது.

மகான்களின் தெய்வீக பண்பைக் கண்டு, அவர்கள்பால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் ஞான உபதேசத்தால் செம்மைபடுத்தப்பட்டவர்கள் நம் மக்கள். அந்த மகான்கள் எந்த மத்த்தைச் சார்ந்தவர்கள் என்று வேற்றுமைபடுத்திப் பார்த்து புறகணித்தவர்கள் அல்ல நமது மக்கள்.

அதனால்தான் இராமரின் பெயரால் மற்றொரு மதத்தின் வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டதை அவர்கள் ஏற்காமல் புறக்கணித்தார்கள்.

எனவே, இராமரின் பெயரால் மற்றொரு அரசியல் முயற்சி அரங்கேற்றப்படுவதை அவர்கள் அறியாதவர்களல்ல.
<< 1 | 2 
மேலும்
மே தினம்!
விலையேற்றம் : பிரதமரின் திசைதிருப்பல்!
ரஷ்யாவிற்காக விண்ணில் பறந்த நாய்!
தூக்கு தண்டனை: கருணைக்கும் விலையுண்டு!
6 மாதத்தில் கடுமையான ‌விலையேற்றம் - ஒரு பா‌ர்வை!
ஒகேனக்கல் : முதல்வரின் முடிவு நியாயமற்றது!