ஆனால், திட்டத்தை தள்ளிப்போடுமாறு காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் தன்னிடம் வலியுறுத்தவில்லை என்று மட்டும் கூறியுள்ளார்.
ஒகேனக்கல் திட்டத்தில் கர்நாடகத்திற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதானே நிதர்சனம்? பிறகு அங்கு புதிய அரசு அமைவதுவரை பொறுத்திருப்போம் என்பதன் பொருள் என்ன?
ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தாரீர் என்று அங்கு புதிதாக அமையவுள்ள அரசிடம் கோரிக்கை வைக்கப்போகிறதா தமிழக அரசு?
இரு மாநில மக்களுக்கிடையே நல்லுறவு நிலவ வேண்டும் என்பதற்காக, ஒரு மாத காலத்திற்கு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறுகிறாரே முதலமைச்சர், புதிய அரசு அமைந்த பிறகு திட்டம் தொடரும் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? அவ்வாறு கூறவில்லையே.
“அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு; அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்றும் - 1998-ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த்த்தின்படி இத்திட்டம் நடக்குமென்றும் - நடப்பதற்கு வலியுறுத்துவோம் என்றும் - அதற்கு நியாயம் கிடைக்குமென்று அசையாத நம்பிக்கையோடு, இப்போது தற்காலிகமாக இந்தப் பிரச்சனையில் அமைதி காப்போம்” என்கிறார்.
எப்படி நியாயம் கிட்டும்?
எப்படி சுற்றிச் சுற்றி வந்து பேசுகிறார் என்று பாருங்கள்! அங்கு புதிய அரசு அமைந்தால் நியாயம் கிட்டும் என்று எதிர்பார்பது எந்த வித்த்திலாவது அர்த்தம் உள்ளதா? அடிப்படையுள்ளதா?
கர்நாடக பா.ஜ.க. ஒகேனக்கல் எங்களுடையது என்கிறது, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான எஸ். எம். கிருஷ்ணா, ஒகேனக்கல் திட்டத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் செல்வோம் என்கிறார் (இன்று இரவு சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சி பேட்டியைப் பாருங்கள்), ஒகேனக்கல் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்கிறார் மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவே கெளடா. ஆக, இந்த மூன்றும்தான் அங்கு பெரிய கட்சிகள், இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் ஒகேனக்கல் திட்டத்திற்கு வேட்டு வைக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபடப்போகிறார்கள். இந்த நிலையில் அங்கு அமையும் புதிய அரசு நமது நியாயத்தை உணரும் என்று எதிர்பார்ப்பதாக தமிழக முதல்வர் கூறுவது உள்ளீட்டற்றது.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக தமிழ்நாட்டின் நலை விட்டுக்கொடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர். இல்லையென்றால் ஒப்புதலளிக்கப்பட்ட ஒரு திட்டத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக நிறுத்தி வைக்கும் முடிவிற்கு வருவாரா?
தேச ஒற்றுமை என்று கூறுகிறாரே, அதனை ஏன் மத்திய அரசு உணரவில்லை? அவர்களல்லவா நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்? மத்திய அரசு ஏன் மெளனம் சாதிக்கிறது என்று கேள்வி எழுப்பவில்லை?
தேச்த்தின் ஒற்றுமையை கருத்தில்கொண்டு ஒகேனக்கல் திட்டத்தைக் கிடப்பில் போடுகிறாரே தமிழக முதல்வர், அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமர் பாலம் பிரச்சனையை பா.ஜ.க. பெரும் பிரச்சனையாக்கினால், அப்பொழுது நாட்டின் சமூக ஒற்றுமையைக் காக்க சேது சமுத்திர திட்டத்தையும் புதிய அரசு பொறுப்பேற்கும்வரை தள்ளிப்போட ஒப்புக்கொள்வாரா?
அரசியல் முதிர்ச்சிபெற்ற, ஆட்சி அனுபவம் அதிகம் கொண்ட தமிழக முதல்வரின் இந்த முடிவு தமிழ்நாட்டிற்கு நியாயம் கூறுவதாக இல்லை. காங்கிரஸைக் காப்பாற்ற தமிழ்நாட்டின் நலனை...
|