முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒகேனக்கல் : மத்திய அரசு மெளனம் சாதிப்பதேன்?
இப்படி இல்லாத ஒரு பிரச்சனையை இரு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனையாக்கி அரசியல் ஆதாயம் தேட இரண்டு தேசிய கட்சிகளும், தேவே கவுடாவின் கட்சியும் முற்பட்டதனாலும், அதனை கன்னட அமைப்புகள் சில தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக்க, இப்பொழுது இரு மாநிலங்களிலும் பேருந்துகள் உடைக்கப்படுகின்றன, போக்குவரத்து நிறத்தப்பட்டுவிட்டது, இரு மாநில திரையுலகத்தினரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்துவிட்டனர். நாளுக்கு நாள் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகிறது.

ஆனால் மத்திய அரசு வாய் திறக்கவில்லை!

கர்நாடகத்தில் தற்பொழுது ஆளுநர் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அதாவது மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் அம்மாநிலம் உள்ளது. இந்த நிலையில் அங்கு நடைபெறும் வன்முறையை முளையிலேயே கிள்ளி எரியாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததனால்தானே அத்திட்டத்திற்கு ஜப்பான் வங்கி நிதியுதவி செய்தது? அத்திட்டத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்று சான்றிதழ் அளிக்கப்பட்டபோது பதவியில் இருந்தது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசல்லவா? அக்கட்சி ஏன் மெளனம் சாதிக்கிறது?

எதையும் கூறாமல் மெளனம் சாதிப்பதன் மூலம், ஒகேன‌க்கலை பிரச்சனையாக்குகிறதா மத்திய அரசு? தனது தேர்தல் நலனிற்காக உண்மையை மறைத்து தேச உணர்வை கேள்வி‌க்குறியாக்குகிறது மத்திய அரசு.

இது மோசமான விளைவுகளுக்கு வித்திடப் போகிறது. நாளுக்கு நாள் பெருகிவரும் வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், அது இந்த தேசிய கட்சிகளின் ‘தேச உணர்வை’ கேள்விக்குறியாக்குவது மட்டுமின்றி, நமது நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்துவிடும்.

மத்திய அரசே பேசு... உடனடியாக பேசு... நீ பேசி முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இப்பிரச்சனை முடிவற்ற பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.
<< 1 | 2 
மேலும்
கிராமத்திற்கு ஒரு இடி தாங்கி வேண்டும்!
காங்கிரஸின் முட்டாள்கள் தினச் செய்தி!
பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவு தினம்!
தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!
'ஸ்கார்லெட்' விவகாரம் : அலட்சியத்தால் எழும் அச்சம்!
தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!