முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒகேனக்கல் : மத்திய அரசு மெளனம் சாதிப்பதேன்?
webdunia photoFILE
காவிரி நதியில் வரும் தண்ணீரை தமிழ்நாட்டின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டகளின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதை எவ்வித அடிப்படையும் இன்றி கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து துவக்கிய வன்முறை நாளுக்கு நாள் பெருகி இரு மாநிலங்களிலும் விசுவ ரூபம் எடுத்து வருகிறது.

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பதற்கு கர்நாடகத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை, மத்திய அரசிடம் பெற்ற ஒப்புதலைக் காட்டி தமிழக அரசு தெளிபடுத்தியப் பிறகும், கன்னட அமைப்புகள் சில தொடர்ந்து இப்பிரச்சனையை தீவிரப்படுத்தி வருவதும், அதனை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அம்மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துப் பேசி வருவதும் இரு மாநிலங்களிலும் வன்முறை பரவ காரணமாகிவிட்டது.

கர்நாடக மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி இப்பிரச்சனையை உருவாக்கியது. சில நாட்கள் முதல்வராக இருந்து பதவி இழந்த பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, கடந்த மார்ச் மாதம் தனது ஆதரவாளர்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனையை உருவாக்கினார்.

webdunia photoFILE
அரசியல் ஆதாயத்திற்காக இப்படிப்பட்ட நடவடிக்கையை எடியூரப்பா மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என்று அப்போதே தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் கண்டித்தார். ஒகேனக்கல் தமிழ்நாட்டிற்குட்பட்ட பகுதியே என்று அங்கு சென்று அதற்கான ஆவணங்களையும் பார்த்து அக்கட்சியின் தலைமைக்கு ஒரு அறிக்கையையும் அளித்தார் இல. கணேசன். ஆனால் அதற்கு பிறகும் கர்நாடக பா.ஜ.க.வின் நிலை மாறவில்லை. ஒகேனக்கல் இரு மாநிலங்களுக்கு இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்று தொடர்ந்து கூறி எல்லைப் பிரச்சனையை அக்கட்சி உருவாக்கியது.

ஒரே கட்சியின் இரண்டு மாநில அமைப்புக்களுக்கிடையே இப்படிப்பட்ட முரண்பாடு! இதையெல்லாம் அக்கட்சியின் அகில இந்தியத் தலைமை கண்டு கொள்ளவில்லை. இன்று வரை மெளனம் சாதிக்கிறது.

இதன்பிறகுதான், கர்நாடகத்திலுள்ள கன்னட அமைப்புகளும் இல்லாத ஒரு பிரச்சனையை தீவிரப்படுத்தத் துவங்கின. பிறகு கர்நாடக காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க. நிலையை ஒட்டியே பேச ஆரம்பித்தது. “தேர்தலுக்குப் பிறகு இப்பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம், அதுவரை ஒகேனக்கல் திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தக் கூடாது” என்று கூறி தன் பங்கிற்கு அரசியல் செய்தார் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், மீண்டும் அரசியல் பிரவேசம் செய்பவருமான எஸ்.எம். கிருஷ்ணா.
1 | 2  >>  
மேலும்
கிராமத்திற்கு ஒரு இடி தாங்கி வேண்டும்!
காங்கிரஸின் முட்டாள்கள் தினச் செய்தி!
பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவு தினம்!
தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!
'ஸ்கார்லெட்' விவகாரம் : அலட்சியத்தால் எழும் அச்சம்!
தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!