முதன்மை பக்கம்  செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
 
மக்களின் கருத்துரிமை மறுக்கப்பட்டுள்ளது!
Webdunia
நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் எடுத்து வைக்கப்படும் கருத்துக்களையும், வாதங்களையும் முழுமையாக அறிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் அரசின் நடவடிக்கைகள் சரியா? தவறா? என்பதை முடிவு செய்யும் உரிமையை ஜனநாயகம் வாக்களிக்கும் மக்களுக்கு அளிக்கிறது.

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கக்கூடிய அரசின் முடிவுகள் அனைத்தும் சரியா? தவறா? என்பதனை உரசிப் பார்க்கும் இடம் ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் நாடாளுமன்றமாகவே இருக்கின்றது. ஜனநாயகத்தின் உயிர்த் துடிப்பாக நாடாளுமன்றம் இருப்பதால்தான் ஜனநாயக அரசியல் அமைப்பை "நாடாளுமன்ற ஜனநாயகம்" என்று அழைக்கப்படுகிறது.

ஆக, ஒவ்வொரு பிரச்சனையிலும் அரசு, எதிர்க்கட்சிகள் இவ்விரு தரப்பையும் சாராத மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் எடுத்து வைக்கும் கருத்தைக் கொண்டும், அதற்கு அரசின் சார்பாக பிரதமரோ, அமைச்சரோ அளிக்கும் பதிலைக் கொண்டும் மக்கள் கருத்து தெளிவுபெற வழிவகுக்கிறது நாடாளுமன்ற நடவடிக்கைகள்.

நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சிகள், மற்ற கட்சிகள் ஆகியவை ஏற்படுத்தும் அமளியின் காரணமாக ஒவ்வொரு நாளும் தள்ளிவைக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு இயங்கவிடாமல் தடுக்கப்பட்டு வருவது வருத்ததிற்குரியது.

இந்த நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கி நேற்று வரை 32 நாட்களில் 17 நாட்கள் மட்டுமே அவை நடந்துள்ளது. அதில் மக்களவை 41 மணி நேரமும், மாநிலங்களவை 42 மணி நேரமும் தள்ளிவைக்கப்பட்டே வீணாகியுள்ளன. இதனால் மக்களவை விவாதித்து நிறைவேற்றியிருக்க வேண்டிய 11 சட்ட முன்வரைவுகளும், மாநிலங்களவை 5 சட்ட முன்வரைவுகளும் விவாதிக்கப்படாமலேயே கிடப்பில் உள்ளன.

இந்த நிலையில்தான், இன்னும் 4 நாட்கள் நடைபெற்றிருக்க வேண்டிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்றுடன் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
 
  1 | 2  >> 
மேலும்
சாந்தி : இந்திய ஒலிம்பிக் சங்கம் பதில் கூறவேண்டும்!
வ.உ. சிதம்பரம் பிள்ளை 136வது பிறந்தநாள் இன்று!
ஆசிரியர் தினம்
ஹைதராபாத் மீண்டும் பயங்கரம்
டெலிமார்க்கெட்டிங்கிற்கு தடை இழப்பா? லாபமா?
பள்ளிகளிலேயே பாலியல் கல்வி அவசியம் - ஏன்?