34 ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு சலுகை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
புது டெல்லியில் இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் 34 ஆப்பிரிக்க நாடுகள் உட்பட மிக குறைந்த அளவு வளர்ச்சியுள்ள 50 நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியில் சலுகை அளிக்கிறது. இந்த சலுகை மூலம் இந்த நாடுகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இறக்கமதி வரி விலக்கு அளிக்கப்படும். இவை இந்தியா இறக்குமதி வரி விதிக்கும் பொருட்களில் 94 விழுக்காடு பொருட்களுக்கு பொருந்தும் என்று அறிவித்தார்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கும் கடன் இரு மடங்காக அதிகரிக்கப்படும். 2003-04 ஆம் ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 215 கோடி டாலர் கடன் வழங்கப்பட்டது. இது 2008-09 ஆம் ஆண்டில் 540 கோடி டாலராக அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
இந்தியாவிற்கும் 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்த வேண்டும் என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், “21 ம் நூற்றாண்டிற்கான இருதரப்பு உறவுகளுக்கான புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். நாம் இரு தரப்பு சம உரிமை, பரஸ்பர நன்மை மற்றும் மதிப்பு என்ற அடிப்படையில் கூட்டு ஏற்பட வேண்டும். இது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இருநூறு கோடி மக்களும் இணைந்து கூட்டுறவாக இருக்க முடியம் என்பதை வளரும் நாடுகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இந்தியா ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இணைந்து உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும்
|