இதுபோன்ற தாக்குதல் பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் வருகின்றன என்பதை,சீன அரசும் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறது. இணையதள தாக்குதல் இயற்கையிலேயே நவீனமானதாக உள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்காக அரசுகளால் அமைக்கப்பட்டுள்ள ரேடார் சாதனங்களின் பார்வையில் சிக்காது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இக்குற்றங்கள் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அரசியல், இராணுவம், பொருளாதாரத் துறைகள், தொழில் நுட்பத் துறைகளில் வேவு பார்க்கவும், நாச வேலைகளை அரங்கேற்றவும் தாராள நிதிஉதவியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட நிறுவனச் செயல்பாடுகள் சிறப்பாக இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
இணையதளக் குற்றங்கள் தற்போது சர்வதேச பிரச்சனையாக உள்ளது. தொழில் நிறுவனங்கள், தனிநபர்களை மட்டும் மிரட்டும் செயலாக இதனைக் கருதிவிட முடியாது என்றும் படிப்படியாக அதன் செயல்பாடுகள் அதிகரித்து நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் என்றும் மெக் ஆஃப்பி அவர்ட் லேப் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவர் ஜெஃப் கிரீன் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிறுவனங்கள் மீது இணையதள வேவுபார்க்கும் அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஒரே தீர்வு தொழில்நுட்பம் ஒன்று தான் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நாடுகள் இக்குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இணையதளத்தில் உள்ள தனிநபர் தகவல்களுக்கும், இணையதள சேவைகளுக்கும் பலவகைகளில் மிரட்டல் வரும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது காணப்படுவது போல மரபணு முறையில் மேம்படுத்தப்பட்ட இணையதள தாக்குதல் நிகழ்வுகள் இதற்கு முன்பு இருந்ததில்லை, இது போன்ற தாக்குதல் விளைவுகள் நுவார் தாக்குதலைப் போன்றதாக இருக்கும் என்று கூறினார்.இதுபோன்று பல நிகழ்வுகள் 2008 -ல் நடைபெறும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இணையதளத்தின் அடிப்படையிலான தொலைத்தொடர்பு (Voice over IP- Internet Protocol) மென்பொருள் மீது தான் தற்போது குற்றவாளிகளின் பார்வை திரும்பியுள்ளது என்றும் அதில் பல்வேறு வசதிகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதாவது தொலைத் தொடர்பு இணைப்புகளைப் பயன்படுத்தி நீண்டதுரத் தாக்குதல் நடத்த வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
|