மத்திய அரசு நேற்று பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டில் 10 விழுக்காடு பங்குகளை வெளியிட தீர்மானித்தது. இதனால் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 48 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.25,956 கோடியாக அதிகரித்தது. நேற்று மட்டும் இந்த 48 நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.15.76 லட்சம் அதிகரித்தது.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவு வாங்கினார்கள்.
இந்த 48 பொதுத்துறை நிறுவனங்களில் 41 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 7 நிறுவனங்களின் பங்கு விலை மட்டுமே குறைந்தது.
இதில் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர் நிறுவனத்தின் பங்கு விலை அதிக அளவு அதிகரித்தது. இதன் விலை 12.17 விழுக்காடு அதிகரித்து, இறுதியில் 1 பங்கின் விலை ரூ.65.90 ஆக முடிவுற்றது.