நாட்டின் வரி விதிப்பு முறை குழப்பம் மிகுந்ததாக இருக்கிறது. இதை சீர்திருத்துவதுடன், ஒரே மாதிரியாக சரக்கு மற்றும் சேவையை அமல்படுத்த வேண்டும் என்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று துவங்கியது. 2008-09 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இதில் கடந்த சில வருடங்களாக வரி விதிப்பு, வரி நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மதிப்பு கூட்டு வரி, மத்திய விற்பனை வரியை படிப்படியாக நீக்குதல், சேவை வரி அறிமுகம், மத்திய மதிப்பு கூட்டுவரி விதிப்பது குறைத்தல் போன்ற சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மத்திய, மாநில அளவில் வரி விதிப்பு குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. இதை சீர்திருத்தவதுடன், ஒரே மாதிரியாக சரக்கு மற்றும் சேவையை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
|