முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உருக்கு விலை குறைக்க முடிவு!
உருக்கு விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் குறைக்க உருக்கு உற்பத்தி ஆலைகள் சம்மதித்து உள்ளன.

கடந்த சில மாதங்களாக உருக்குக் கம்பி, தகடு உட்பட உருக்கு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இத்துடன் கட்டுமானத் தொழிலுக்கு தேவைப்படும் டி.எம்.டி. பார் என்று அழைக்கப்படும் முறுக்கு கம்பியின் விலையும் அதிகரித்தது.

இந்த விலை உயர்வினால் கட்டுமானத் துறை, வாகனம், நுகர்வோர் பொருட்கள் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த தொழில்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாயின.

மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உருக்கு ஆலை உயர் அதிகாரிகளை அழைத்து, உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.

இவர்கள் உருக்கு உற்பத்திக்கு தேவையான கோக் எனப்படும் உலைகரி, நிக்கல், ஜிங்க் ஆகியவற்றின் விலை அதிக அளவு உள்ளது. இவற்றின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது.

ரயில்வே சரக்கு போக்குவரத்து கட்டணத்தை குறைக்க வேண்டும். அத்துடன் இரும்பு தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறின.

இதில் கோக், நிக்கல், ஜிங்க் போன்றவைகளுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது.

ரயில்வே இரும்பு தாது போக்குவரத்து கட்டணத்தை குறைத்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவினர் உருக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் தான், இதன் விலைகள் உள்நாட்டு சந்தையில் அதிகரிக்கின்றன. இதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இவர்கள் அதிக அளவு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு உருக்கு கம்பி, பாளம், உருட்டு கம்பி போன்ற சில பொருட்களின் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தியுள்ளது.

இரும்பு தாது சுரங்க உரிமையாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறும் வகையில், இரும்பு தாது ஏற்றுமதியால் உள்நாட்டு உருக்கு ஆலைகள் பாதிக்கப்படவில்லை. உள்நாட்டு உருக்கு ஆலைகளின் தேவைக்கு போக உபரியாக உள்ள இரும்பு தாதுதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அத்துடன் பெரும்பாலான உருக்கு ஆலைகளுக்கு சொந்தமாக இரும்பு தாது வெட்டி எடுக்கும் சுரங்கங்களும், நிலக்கரி வெட்டி எடுக்கும சுரங்கங்களும் உள்ளன என்று மத்திய அரசிடம் எடுத்து கூறின.

இவ்வாறு பல்வேறு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களையும், கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் எடுத்துரைத்தனர்.
1 | 2  >>  
மேலும்
வங்கிகளில் அந்நிய முதலீட்டிற்கு தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு!
ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதி முதலீடு விதிமுறை!
அந்நிய நேரடி முதலீடு 2457 கோடி டாலர்
ரூ.308 கோடி அந்நிய நேரடி முதலீடு அனுமதி!
வங்கி பரிமாற்ற வரி நீக்கம் - சிதம்பரம்!
ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதிக்கு அனுமதி!