முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தையில் 333 புள்ளி சரிவு!
பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே குறைந்து வந்த குறியீட்டு எண்கள், கடைசி வரை உயரவே இல்லை.

ஆசிய நாடுகளில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, மற்றும் நிதிச் சந்தையில் பெரிய அளவு எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால், பங்கு விலைகள் குறைந்தன.

அத்துடன் டிரைவ்டிவ்ஸ் எனப்படும் முன்பேர வர்த்தகத்தில் இந்த மாத கணக்குகள் முடிக்கப்பட வேண்டும். அடுத்து பிப்ரவரி முதல் தேதியில் இருந்து புதிய கணக்கு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும்.

ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்த பொருளாதார கொள்கையால், புதிய இதன் காரணமாக டிரைவ்டிவ்ஸ் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை.இதுவும் பங்குச் சந்தையின் சரிவுக்கு மற்றொரு காரணம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

காலையில் இருந்து குறைந்து வந்த சென்செக்ஸ் இறுதியி்ல் 333.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,758.64 ஆக முடிந்தது.

மத்திய அரசு பெட்ரோலிய துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது என்ற முடிவு எடுத்ததால், கடைசி நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிக அளவு குறைந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவன பங்கு விலை 4.12 விழுக்காடும், ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை 5.44 விழுக்காடும் குறைந்தன. இதே போல் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்கு விலை 4.94 விழுக்காடு குறைந்தது.

மிட் கேப் 192.18, சுமால் கேப் 230.81, பி.எஸ்.இ-500 163.49 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 113.20 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5,167.60 ஆக குறைந்தது. அந்நிய முதலீட்டை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்ற அறிவிப்பு, அமெரிக்க ரிசரிவ் வங்கி மேலும் அரை விழுக்காடு வட்டி குறைக்கும் என்பதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவது மந்தமாக இருந்தது. இதனால் பங்குகளின் விலைகள் குறைந்து.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜீனியர் 327.70, சி.என்.எக்ஸ் ஐ.டி 18.25, பாங்க் நிஃப்டி 165.45 சி.என்.எக்ஸ் 100- 118.80, சி.என்.எக்ஸ் டிப்டி 100.15, சி.என்.எக்ஸ் 500- 105.65, மிட் கேப் 183.70, மிடேகேப் 50- 103.15 புள்ளிகள் குறைந்த

பங்குகளின் இறுதி விலை நிலவரம் :

மும்பை சென்செக்ஸ் பிரிவில் வர்த்தகம் முடிந்த போது விலை அதிகரித்த பங்குகளின் விபரம் :

ஏ.சி.சி. பங்கு விலை ரூ.5.70 அதிகரித்து பங்கின் விலை ரூ.797.35 ஆக உயர்ந்தது.
அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ0.90 அதிகரித்து பங்கின் விலை ரூ.118.30 ஆக உயர்ந்தது.
1 | 2  >>  
மேலும்
மும்பை தங்கம் வெள்ளி விலை!
மும்பை தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்தது!
சென்னை எண்ணெய் சந்தை நிலவரம்!
வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தை‌க‌ளி‌ல் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!