முதன்மை பக்கம்  செய்திகள் > நிதி > கட்டுரைகள்
 
மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!
Webdunia
webdunia photoFILE
வடகிழக்கு மாநிலமான மிஜோரமில் உள்ள காடுகளில் பல வகையான மூங்கில்கள் வளர்கின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் மூங்கில் நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அத்துடன் காகித தொழிற்சாலை, பிளைவுட் பலகை தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற தொழில் துறைகளில் கச்சாப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.

மூங்கிலின் பூ பூக்கும் காலத்தில் எங்கிருந்து தான் சுண்டெலிகள் படையெடுக்குமோ தெரியாது. இந்த பூவின் வாசத்திற்கு கவரப்பட்ட சுண்டெலிகள் மூங்கில் காடுகளில் படையெடுத்து விடுகின்றன். இவைகளுக்கு மூங்கிலின் இளம் குருத்து தான் உணவு. ருசியான மூங்கில் இளம் குருத்துக்களை உண்ட சுண்டெலிகள் குடும்ப கட்டுப்பாடு போன்ற எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பல்கிப் பெருகுகின்றன. இதன் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போய்விடுகின்றது.

மூங்கிலில் 48 வருடத்திற்கு ஒரு முறைதான் பூ பூக்கும். இவை பெரும்பாலும் பிப்ரவரியில் இருந்து மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பூ பூக்கும்.

மூங்கிலில் பூ பூக்கும் காலத்தை மூட்டம் என்று வடகிழக்கு பகுதி விவசாயிகள் அழைக்கின்றனர். இந்த மூட்டம் பருவம் ஆரம்பித்தால் விவசாயிகளும், அரசு அதிகாரிகளும் மிரண்டு போய் விடுகின்றனர். இவர்கள் கனவுகளிலும் சுண்டெலிகள் பிராண்டி எடுக்கின்றன. அந்த அளவு சுண்டெலிகள் பயமுறுத்துகின்றன. சுண்டெலிகளின் அட்டகாசத்தால் மிஜோரமின் பொருளாதாரமே பாதிக்கப்படுகின்றது.

webdunia photoFILE
மூங்கில் காடுகளில் 48 வருடத்திற்கு ஒரு முறை தான் பூ பூக்கும். இதற்கு முந்தைய காலக்களில் மூட்டம் பருவத்தில் சுண்டெலிகளின் படையெடுபபால் உணவு தானியங்கள் அழிந்து பஞ்சம் தலைவிரித்தாடிய சோக கதையை விவசாயிகள் நினைவு படுத்துகின்றனர்.

சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவித மூங்கிலில் பூ பூத்தது. அப்போது அரசின் விவசாயத்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் முழு அளவில் களத்தில் குதித்து பாதிப்பை தடுத்தனர்.

சுண்டெலி ஒழிப்பு சிறப்புப் படை!

இந்த ஆண்டு புலுரா என்ற ரக மூங்கிலில் பூ பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் வாசனையால் கவரப்பட்ட சுண்டெலிகளின் படையெடுப்பும் துவங்கிவிட்டது.

இதை தடுக்க விவசாயதுறை அதிகாரிகள், முழு அளவு பூ பூக்க துவங்கும் முன்பு பலூரா வகை மூங்கிலை வெட்டிவிடும் படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன் விவசாய துறையில் பயிர் பாதுகாப்பு என்ற பெயரில் சுண்டெலி ஒழிப்பு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் 15 நாட்கள் இரவுகளில் காடுகளில் பதுங்கியிருந்து மூட்டம் காரணமாக சுண்டெலிகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

அத்துடன் சுண்டெலிகள் விளைந்த பயிர்களை எப்படி தாக்குகின்றன என்பதை ரகசியமாக வீடியோ படம் பிடித்தனர்.
  1 | 2 | 3  >> 
மேலும்
பங்குச் சந்தை : பார்டிசிப்பேட்டரி நோட் மிரட்டல்?
இந்தியாவில் கடன் நிதி நெருக்கடி ஆபத்து!
கிராம்பு விலை அதிகரிக்கும்!
ஏற்றுமதி, இறக்குமதியை பாதிக்கும் அரசின் முடிவு!
இயற்கை உரத்தால் விவசாயிகளின் வருவாய் உயர்வு!
மாம்பழ மகசூல் மகிழ்ச்சி கொடுக்க .....