முதன்மை பக்கம்  செய்திகள் > நிதி > கட்டுரைகள்
 
ஏற்றுமதி, இறக்குமதியை பாதிக்கும் அரசின் முடிவு!
Webdunia
விமாநிலையங்களின் சரக்கு (cargo complexes) முனையங்களில், கட்டணமின்றி சரக்குகளை வைக்கும் காலத்தை குறைத்து, ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு மத்திய அரசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

விமானங்களில் வெளிநாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும இறக்குமதியாளர்களும் குறிப்பிட்ட நாட்கள் வரை சரக்கு முனையத்தில் இலவசமாக வைத்திருக்கலாம்.

ஏற்றுமதியாளர்கள் சரக்கு விமானங்களில் அனுப்புவதற்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு சரக்குகளை லாரிகள் மூலமாக கொண்டு வர வேண்டும்.

சாலையில் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து, அரசியல் கட்சிகளின் பேரணியால் பாதையை திருப்பி விடுதல், நகரங்களில் லாரிகளை இயக்க நேரக் கட்டுப்பாடு, மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் தாமதமாகுதல் போன்ற காரணங்களினால் தாமதமாவதை தவிர்க்க சில நாட்கள் முன்பே சரக்கை கொண்டு வந்து சரக்கு முனையத்தில் வைக்கின்றனர்.

இது மட்டுமின்றி, சுங்கத் துறையினர் பரிசோதனை செய்வதற்கு ஏற்படும் கால தாமதம் போன்ற காரணங்களினால் ஏற்றுமதியாளர்கள், சரக்குகளை ஐந்து நாட்களுக்கு முன்பே சரக்கு முனையத்திற்கு கொண்டு வருகின்றனர். இது போன்ற காரணங்களினால் இறக்குமதியாளர்களும் சரக்கு வந்து சேர்ந்த பின், சரக்கு முனையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கும் நான்கு, ஐந்து நாட்கள் ஆகின்றது.

இது வரை ஏற்றுமதியாளர்கள் இரண்டு நாட்களும், இறக்குமதியாளர்கள் ஐந்து நாட்களுக்கும் சரக்கு முனையத்தில் தங்கள் சரக்குகளை இலவசமாக வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. சரக்கு முனைய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதற்கு மேல் சரக்குகளை வைத்திருந்தால், அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.

இதை அக்டோபர் 1-ம் தேதி முதல் இலவசமாக வைக்கும் காலத்தை இறக்குமதியாளர்களுக்கு ஐந்து நாட்களில் இருந்து மூன்று நாட்களாகவும், ஏற்றுமதியாளர்களுக்கு இரண்டு நாட்களில் இருந்து ஒரு நாளாகவும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  1 | 2  >> 
மேலும்
இயற்கை உரத்தால் விவசாயிகளின் வருவாய் உயர்வு!
மாம்பழ மகசூல் மகிழ்ச்சி கொடுக்க .....
தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி 13.6 மில்லியன் டன்கள் !