இதற்காக புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கணக்கிடும் முறையில், உண்மையாக ஆகும் செலவு, யதார்த்தமான முறையில் கணக்கிடப்படும் என்று கூறினார்.
“விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு, மத்திய அரசுக்கு 25 விதமான விவசாய விளை பொருட்களின், உற்பத்தி செலவு பற்றி பரிந்துரைக்கிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது.
இந்த அமைப்புக்கு தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் மகேந்திர தேவ், ஹைதராபாத்தில் உள்ள பொருளாதாரம் மற்றும் சமூக விஞ்ஞான மையத்தின் இயக்குநராக இருந்தவர்.
இவர் மேலும் கூறுகையில், நாடு முழுவதும் ஒரே மாதிரி கணக்கிட முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். 16 மாநிலங்களில் இருந்து பெறும் விபரங்களின் அடிப்படையில், பொதுவான முடிவை எடுக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செலவு வேறுபடும். வேலை செய்பவர்களின் கூலி, இதர இடுபொருட்களின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. இதை மாநில அரசுகள் தான் கணக்கெடுத்து கொடுக்க வேண்டும்.
இத்துடன் இனி விலையை பரிந்துரைப்பதற்கு முன்பு, மற்ற நாட்டில் நிலவும் சூழ்நிலைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உலகமயமாக்கல் சூழ்நிலையில், உள்நாட்டில் உள்ள சூழ்நிலைகள் மட்டும் விளைபொருட்களின் விலையை நிர்ணயிக்க போதுமனதல்ல. மற்ற நாட்டில் உள்ள விலைகளும், உள்நாட்டு விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பேராசிரியர் மகேந்திர தேவ் கூறினார்.
( சென்ற வருடம் மத்திய அரசு வெளிநாடுளில் இருந்து இறக்குமதி செய்த கோதுமைக்கு, உள்நாட்டு விவசாயிகளுக்கு கொடுக்கும் விலையை விட, இரண்டு மடங்கு விலை கொடுத்து இறக்குமதி செய்தது).
விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு, கரும்புக்கு நிர்ணயிக்க வேண்டிய விலை பற்றி ஆகஸ்ட் மாதத்திலும், ரபி பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான விலை பற்றிய பரிந்துரையை ஜூலை மாதத்தில் பரிந்துரைக்க வேண்டியதுள்ளது.
|