விவசாயிகள் உற்பத்தி செய்யும நெல், கோதுமை உட்பட பணப்பயிரின் உண்மையான உற்பத்தி செலவு புதிய முறையில் கணக்கிடப்பட உள்ளது.
“விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு” என்ற அமைப்பு, விவசாயிகள் விளை பொருட்களின் உற்பத்தி செலவை கணக்கிடுகிறது. இதன் அடிப்படையில் நெல், கோதமை, கரும்பு போன்றவற்றை, விவசாயிகளிடம் இருந்து என்ன விலையில் கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து வாங்கும் உணவு தானியங்களின் கொள்முதல் விலையை அறிவிக்கிறது.
உணவு தானியங்கள், கரும்பு போன்ற பணப் பயிர்களின் உற்பத்தி செலவுக்கும், அரசு அறிவிக்கும் விலைக்கும் அதிக வேறுபாடு உள்ளது.
விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழு, கணக்கிடும் முறையில் தவறு உள்ளது, இது உற்பத்தி செலவை கணக்கிடும் முறை யதார்ததமாக இல்லை.
இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது என்று பல்வேறு விவசாயிகள் சங்கம், விவசாயதுறை நிபுணர்கள் புகார் கூறியுள்ளனர்.
“விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய குழுவின் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் மகேந்திர தேவ் கருத்து தெரிவிக்கையில்,
விளைபொருட்களுக்கு ஆகும் செலவை கணக்கிடும் முறைக்கும், யதார்த்த நிலைக்கும் அதிக அளவு வேறுபாடு இருந்தால், விவசாய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட துறைகளிடம், அவர்கள் தகவல் பெறும் முறையை மாற்றுமாறு கேட்டுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.
|