முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > வேளாண்மை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பருவநிலை மாற்ற‌த்தா‌ல் நெ‌ல் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்!
உலகில் பாதியளவு மக்கள் அ‌ரி‌சியை‌த் தங்களது உணவாக பயன்படுத்து‌ம் ‌நிலை‌யி‌‌ல், பருவநிலை மாற்றத்தால் நெ‌ல் உற்பத்தி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

உலக மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில் ஏற்கனவே, அரிசிக்கான தேவை மூன்று மடங்கு அ‌திக‌ரி‌த்து‌ள்ள நிலையில், ஆஃப்ரிக்கா போன்ற ஏழ்மையான பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.

பருவநிலை மாற்றங்களால் உற்பத்தி பாதிப்பை தீர்மானிப்பது மிகவும் கடினமானது. பயிர்களின் வளர்ச்சியில் சீதோஷ்ண நிலை, கார்பன் டை ஆக்ஸைடு, ஓசோன் அளவு குறைந்து வருதல் ஆகியவை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அநத ஆய்வு கூறுகிறது.

இதுபோன்ற ஆய்வுகள் ஒரு முக்கிய பிரச்சனைகளை மட்டுமே மையப்படுத்தினாலும், எடுத்துக்கொள்ளப்பட்ட காரணியின் ஒட்டுமொத்த விளைவுகளை அறிவதும் கடினமானது.

ஆய்வை மேற்கொண்ட இல்லினோய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் எலிசபெத் அய்ன்ஸ்வொர்த் கூறுகையில், "செயற்கையான பருவமாற்றங்களைக் கொண்டு உண்மையான உலகில் ஏற்படும் மாற்றங்களையும், அதற்கான தீர்வுகளையும் கூறுவது சரியானதாகாது. ஆனால், 80 வேறுபட்ட ஆய்வுகளை ஒன்றிணைப்பதின் மூலம் அவை ஓரளவு சாத்தியம்" என்றார்.

சீதோஷ்ண நிலை பாதிப்புகள்!

தினமும் சராசரியாக 30 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக சீதோஷ்ண நிலை காணப்படும் போது, அரிசியின் உற்பத்தி வீழ்ச்சி அடையும்.

குறைவான உற்பத்தி நிகழும் போது சீதோஷ்ண நிலை அதிகரிக்கிறது. இது கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகரித்து பருவநிலை மாற்றத்திற்கு வித்திடுகிறது.
1 | 2  >>  
மேலும்
உணவு தானியங்கள் விலை உயர அமெரிக்காவே காரணம்!
நெற் பயிர் : ஏக்கருக்கு ரூ.4,000 நஷ்டஈடு!
நாளை முதல் மீண்டும் மழை பெய்யும்!
மெகா ஆரஞ்சு பழ திருவிழா!
காஃபி தோட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி!
பஞ்சாப்பில் நெல் பயிரிட‌த் தடை!