முதன்மை பக்கம்  செய்திகள் > வேலை வழிகாட்டி > வாய்ப்புகள்
 
சட்டத்துறையில் அயல் அலுவலக பணி வாய்ப்பு!
இதில் சட்டம் படித்த பட்டதாரிகளுக்கு மட்டும் இல்லாமல் பொறியியல் பட்டதாரிகளுக்கும் காப்புரிமை பணிகளை செய்து கொடுக்கும் வாய்ப்பு அதிகளவு உள்ளது.

இந்திய காப்புரிமை ( பேட்டண்ட் ) ஆணையத்தில் 600 காப்புரிமை முகவர் அலுவலகங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. அத்துடன் 300 அறிவுசார் சொத்துரிமையை பதிவு செய்யும் அலுவலகர்கள் இருக்கின்றனர். தற்போது இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்கா மற்றம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு காப்புரிமை பணியை செய்து கொடுக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டில் 1,800 முதல் 2,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்ட்ரேலியா, தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள், தங்களின் சட்டம் சார்ந்த பணிகளை, மற்ற நாடுகளில் கொடுத்து அயல் அலுவலக பணி முறையில் செய்து கொள்கின்றன.

பொறியியல் படித்த பட்டதாரிகள் காப்புரிமை பணியில், காப்பிரிமைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு பொருளுக்கு போன்று, மற்ற நிறுவனங்கள் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளதா என்று ஆய்வு செய்வது, காப்புரிமை விண்ணப்பம் தயாரிப்பது, விண்ணப்பத்தில் இணைக்கும் ஆவணங்களை தயாரிப்பது, தொழில்நுட்ப தகவல்கள் உட்பட பல்வேறு பணிகள் செய்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

இது போன்ற சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த பணிகளை மற்ற வெளிநாடுகளுக்கு அயல் அலுவல் பணி முறையில் வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான லாஸ்கிரிப் இன்கார்பரேடட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அலுவலருமான குனூர் சோப்ரா கூறியதாவது :

“அமெரிக்காவில் ஒரு சட்டத்துறை சார்ந்த பணி செய்ய 200 முதல் 300 டாலர் வரை செலவாகும். அதே வேலையை இந்தியாவில் 30 டாலருக்குள் செய்து முடித்து விடலாம். இதனால் எங்களுக்கு 90 விழுக்காடு செலவு மிச்சமாகிறது.

மற்ற நாடுகளை விட இந்தியாவை விரும்பக் காரணம். ஊழியர்களின் சம்பளம் குறைவு, ஆங்கில மொழித் திறன், இங்கு சட்டத்துறை சார்ந்த படிப்புக்கும் மற்ற நாடுகளில் உள்ளவைகளுக்கும் அதிகளவு ஒற்றுமை இருப்பதே.

இப்போது இந்தியாவில் உள்ள எங்கள் அலுவலகம் குர்கானில் உளளது. இதில் 85 பேர் பணியாற்றுகின்றனர். இதை அடுத்த வருடத்திற்குள் 300 பேராக அதிகரிக்கப் போகின்றோம். நாங்கள் லூதியானா, ஜெய்ப்பூர், சண்டிகார், டேராடூன் உட்பட பல நகரங்களில் அலுவலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இப்போது இந்த துறையில் பணியில் சேருபவர்கள் குறுகிய காலத்திலேயே மற்ற நிறுவனங்களுக்கு சென்று விடுகின்றனர். இந்த போக்கை தடுத்து நிறுத்த ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, நிறுவனத்தின் பங்குகளை வழங்குதல் போன்றவற்றை செய்து கொடுக்க உள்ளோம” என்று அவர் கூறினார்.
 << 1 | 2   
மேலும்
பட்டு நூல் விவசாயிகளுக்கு புதிய தொழில் துவங்க கடனுதவி
இன்டர்வியூவில் கேள்விகளும் பதில்களும்
டிப்ளமோ' முடித்தவர்கள் நர்சிங் பட்டப் படிப்பில் சேர
தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு
சென்னை பல்கலையில் கூடுதலாக 5,000 இடங்கள்
அண்ணா பல்கலை. திறன் மேம்பாட்டு பயிற்சி