வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (07:57 IST)

50 லட்சம் ரூபாயை ஏமாந்த யுவராஜ் சிங்கின் தாய்

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குன் தாய் ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 50 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் மும்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். அந்த நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கு மாதம் 7 லட்சம் ரூபாயை வட்டியாக கொடுத்து வந்துள்ளது.
 
50 லட்சம் ரூபாயை திருப்பி தந்த நிறுவனம், மீதமுள்ள 50லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது.
 
இதையடுத்து யுவராஜின் தாய் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.