1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (13:34 IST)

தேர்தலில் போட்டியிட கூட பணம் இல்லை : கை விரிக்கும் கெஜ்ரிவால்

தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்கு பணம் எதுவும் இல்லை என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 

 
தெற்கு கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”டெல்லியில் ஒன்றரை ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வரும் நிலையிலும் தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சிக்கு பணம் இல்லை என்பதுதான் உண்மை. எனது வங்கிக் கணக்கை நான் உங்களிடம் காண்பிக்கிறேன்.
 
எங்கள் கட்சியின் வங்கிக் கணக்கிலும் பணம் இல்லை. இருந்த போதிலும், கோவா மற்றும் பஞ்சாப் மற்றும் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரத்தை துவங்கியுள்ளோம். டெல்லியில் நாங்கள் போட்டியிடும் போது உண்மையில் போட்டியிட்டது டெல்லி மக்கள் தான்.
 
கோவாவில் போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில அரசு விரும்பினால் அடுத்த ஒரு மணிநேரத்தில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களுக்கும் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது.
 
இதன் காரணமாக போதைப்பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. காவல்துறை மூலமாக அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது” என்றார்.