முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > யோகா > ஆசன‌ங்க‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சவாசனம்!
webdunia photoWD
செத்த பிணம் போல் இருக்கும் யோக நிலை சவாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் மூலமே ஒருவர் மன அமைதி, உடல் தணிவடைதல் என்பதை சரியாக புரிந்து கொள்ளமுடியும்.

செய்முறை :

செய்முறைக்கான உதவியாக கீழ்வரும் துணைப் பகுதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன : சவாசனத்திலிருந்து எழுந்திருத்தல், பக்கவாட்டு சவாசன நிலைகள், அமைதி‌ப்படுத்துவதற்கான கால அளவு முறை. உடல் இருக்க வேண்டிய நிலைகள், மற்றும் சவாசன மூச்சுப்பயிற்சி உத்திகள்.

மன அமைதி தரும் சப்தங்கள் இல்லா ஒரு தூ‌ய்மையான சூழல் இந்த ஆசனத்திற்கு தேவைப்படும்.

தரையில் துணியோ அல்லது அதுபோ‌ன்ற மெ‌லிதான ‌வி‌ரி‌ப்பு ஒ‌ன்றையோ விரிக்கவும்.

உட‌லி‌ல் குறைந்த அளவு ஆடை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இப்போது ‌வி‌ரி‌ப்‌பி‌ல் மல்லாக்க படுக்கவும்.

தலை ‌வி‌ரி‌ப்‌பி‌ன் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும்.

துடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும்.

உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கவேண்டும்.

வாயை லேசாக திறக்கவும்.

மெல்ல கண் இமைகளை தாழ்த்தி, லேசாக மூடவும். கண்மணிகள் நிலையாக இருக்கவே‌ண்டும். கண்களை மெதுவாக மூடவும்.

இப்போது நீங்கள் அமைதியான உறக்கத்திற்கு செல்லவே‌ண்டும்.

மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும்.

உடல் மனம் ஆகியவற்றின் பிரக்ஞையின்றி உறக்க நிலையில் இருக்கவேண்டும்.

இது போன்ற சாந்தமான நிலையில் நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், எதையும் கேட்கமாட்டீர்கள், புலன் உணர்வு இருக்காது மனம் ஒரு நிர்வாண நிலையில் இருக்கும்.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
மேலும்
மயூராசனம்  
பிரம்ம முத்ராசனம் (பிரம்மாவின் குறியீடு)  
பஷ்ச்சிமுத்தாசனம்  
உஷ்த்ராசனம் (ஒட்டக நிலை)  
வ‌க்ராசன‌ம்  
அர்த மத்ஸ்யேந்த்ராசனா