இந்த நிலையில் சிறிது நேரம் உடலை நிலை நிறுத்தியப் பிறகு, முதலில் கால்களையும், பிறகு மேலுடம்பையும் தரையைத் தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்
முதலில் கால்கள் இரண்டையும் பழைய நிலைக்கு இழுத்துக் கொண்ட பிறகு, உடலை உயர்த்திக் கொண்டு கைகளை நகர்த்தி அமர்ந்த நிலைக்கு வரவேண்டும்
எச்சரிக்கை :
இது மிக மிக முக்கியமான சமநிலை கொள்ளும் ஆசனமாகும்
இதனைச் செய்யும் போது முழு உடலின் எடையும் வயிற்றின் கொப்பூழ் கொடியிடத்தில் மையமாவதால், சமநிலை தவறும் சாத்தியம் உண்டு, எனவே மிக எச்சரிக்கையாக செய்யவும்
நிதானமாக ஒவ்வொரு நிலையையும் எட்ட வேண்டும், அவசரப்பட்டு வேகமாகச் செய்திடலாகாது
இந்த ஆசனத்தைச் செய்யும் போது தும்மலோ அல்லது இருமலோ வருவதுபோல் இருந்தால், பழைய நிலைக்கு வந்துவிடவேண்டும்
பயன்களும் கட்டுப்பாடுகளும் :
இந்த ஆசனம் செரியாமை (டிஸ்பெப்ஸியா), குடலிரக்கம் (விசரோப்டோசிஸ்) போன்றவற்றை குணப்படுத்திக் கொள்ள மிகச் சிறந்தது
முதுகுத் தண்டு, கழுத்து வலி பிரச்சனையுள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
|