கடை வீதிகளுக்கு குறிப்பாக சென்னை ரங்கநாதன் தெரு போன்ற அங்காடித் தெருவில் பொருட்களை வாங்க வரும் போது கண்டிப்பாக குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம்.
அதிகமான மக்கள் தொகை கொண்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் நசுங்கிப்படும் பாடு சொல்ல மாட்டாதவை.
அதிலும், குழந்தையையும், ஒரு கையில் வாங்கியப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு ரயிலிலோ, பேருந்திலோ செல்வது என்றால் மிகவும் கொடுமையாக இருக்கும்.
குழந்தைகளை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விட்டுவிட்டு வாருங்கள். அல்லது குழுவாகச் செல்பவர்களில் யாராவது ஒருவர் குழந்தையை வீட்டிலேயே வைத்துக் கொண்டு பராமரிக்க அறிவுறுத்துங்கள்.
கூட்டத்தில் குழந்தைகள் மூச்சு விடக் கூட சிரமப்படுவார்கள். மற்றவை எல்லாம் சொல்லத்தான் வேண்டுமோ. |