குழந்தைகள் பொதுவாக நிறையக் கேள்விகள் கேட்கும். அது என்ன இது என்ன என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால்தான் அவர்கள் அப்படி கேட்கிறார்கள்.
எனவே இதைச் சொன்னால் அவர்களுக்குப் புரியாது என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டு எதையாவது கூறாதீர்கள்.
அவர்கள் கேட்கும் விஷயத்தைப் பற்றி விளக்கமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். படம் வாங்கிக் காண்பியுங்கள். அவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தோடு அதை தொடர்பு படுத்திக் கூறுங்கள்.
அவர்களுக்கு அது புரியாமல் போனாலும், நீங்கள் சொன்ன தகவல்கள் மனதில் பதிந்து விடும். அதைப் பற்றி அவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ளும் நாள் வரும் போது நீங்கள் சொன்ன தகவல்கள் மிகுந்த பயனை அளிக்கும். |