ஈடுபடுவது பெற்றோர்கள், குழந்தைகள் இருவருக்குமே நல்லது.
தாய்மார்கள் இரவுத் தூக்கத்தை இழக்க நேரிடுவதால் பகலில் கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்வது சிறந்தது. தூக்கமின்மையால் களைப்பு மேலிட எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றலாம். இரட்டைக் குழந்தைகளை பெற்றவர்களுக்கு எப்போதுமே குழந்தைகள் மேல் காட்டும் அக்கறையில் தாங்கள் பின்தங்கியிருக்கிறோம் என்ற உணர்வு அடிக்கடி ஏற்படும்.
இரட்டையர்களில் ஆளுக்கு ஒருவரை மாற்றி மாற்றி வைத்துக் கொள்ளவும். இரட்டையர்கள் என்பதை விட இருவரும் இரு தனி நபர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். எனவே இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான பால் சுரப்பது என்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முடியாதது ஒன்றும் இல்லை. பால் சுரக்க தேவையானவற்றை தாய்மார்கள் சாப்பிடத் தொடங்க வேண்டும். உண்ணும் உணவை சரியாக அமைத்துக் கொண்டாலே போதும் பால் அதிகமாக சுரக்கும். குழந்தைகளின் உடல் எடை சீராக இருக்கும் வரை இது பற்றி அதிகமாகக் கவலை கொள்ளத் தேவையில்லை.
உள்ளாடைகள், பால் புட்டிகள், உணவுப் பொருட்கள் கொடுக்கும் பாத்திரங்களைத் தனித்தனியாகப் பயன்படுத்தவும். எதை எடுத்தாலும் ஒரே நிறத்தில் வாங்காமல் ஒரு குழந்தைக்கு ஒரு நிறத்திலும் மற்றொரு குழந்தைக்கு மற்றொரு நிறத்திலும் வாங்குவது சிறந்தது.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு வெவ்வேறு நிறங்களை ஒதுக்கிவிட்டு எதை எடுத்தாலும் அவர்களுக்கான நிறத்தில் எடுத்து வைத்துக் கொள்வதும் சில பல குழப்பங்களைத் தவிர்க்கும்.
இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே உணவைத் தயாரித்துக் கொடுக்காமல் அவர்களுக்குப் பிடித்த சுவையில் பால் முதற்கொண்டு தனித்தனியாக செய்து கொடுக்கும் போது அவர்கள் விரும்பும் சுவையில் அவர்களுக்கான உணவு இருக்கிறது என்ற திருப்தி கிட்டும்.
இரட்டைக் குழந்தைகளின் கவனிப்புப் பற்றி பார்த்தோம். அடுத்த கட்டுரையில் இரட்டைக் குழந்தைகளின் வளர்ப்புப் பற்றி பார்ப்போம்.
|