ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பது என்பதே இன்றைய காலத்தில் தம்பதிகளுக்கு பெரும் சவாலான பணியாக உள்ளது. அப்படி இருக்கும் போது தாயின் கருவறையை பகிர்ந்து கொண்ட இரட்டையர்களை பராமரிப்பது என்பது சொல்லவே வேண்டாம்.
இரட்டையர்களை பராமரிப்பதற்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும். நிச்சயம் அவர்களைப் பராமரிக்கும் பணியில் இருவர் ஈடுபடுவது நல்லது. அதுதான் குழந்தைகளுக்கும், பராமரிப்பவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தாது.
இரட்டையர்கள் எப்போதும் இயற்கையால் ஒருங்கிணைந்த இரு தனி நபர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வது நலம்.
இரட்டைக் குழந்தைகளைப் பெறுவது வாழ்வில் மகிழ்ச்சியான கணங்களில் ஒன்று. ஆனால், அதே சமயம் இரண்டு குழந்தைகளையும் நன்கு பராமரிக்க வேண்டிய கடுமையான பொறுப்பை ஏற்கும் தாய் மனதளவில் தயார் ஆக வேண்டும்.
எதற்கு, எப்போது முன்னுரிமை கொடுப்பது என்பது பற்றி தாய்மார்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
முதல் ஒரு சில மாதங்களில் துணி மாற்றுவது முதல், தாய்ப்பால் கொடுப்பது வரை, அவர்களை தூங்க வைப்பது போன்ற விஷயங்களில் இரட்டை சவாலை எதிர்கொள்ள வேண்டி வரும். பொதுவாகவே குழந்தை பிறந்த சில நாட்கள் வரை பிறரது உதவி தேவைப்படும்.
அதே நேரம் இரட்டைக் குழந்தை எனும்போது பிறரின் உதவி என்பது கட்டாயத் தேவையாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் பேசுங்கள். அதாவது குழந்தை வளர்ப்பில் கடமைகளை பகிர்தல் பற்றி அவருக்கு விளக்குங்கள். குழந்தை வளர்ப்பில் தாய் - தந்தை இருவரும்...
|