பொதுவாக வீட்டில் நாற்றத்தை உண்டுபண்ணுபவை புளித்த தயிர், தோசை மாவு, பழைய குழம்பு வகைகள் போன்றவைதான்.
இவற்றை சிங்கில் ஊற்றி சிங்கையும் நாறடித்துவிடாதீர்கள். பொதுவாக வெளியில் இருக்கும் சாக்கடையில் கொட்டுவது நல்லது. இது தனித்தனியாக இருக்கும் வீடாக இருந்தால் சரி.
பிளாட்டில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது எனவே. இவற்றைக் கொட்ட வேண்டும் எனில் சிங்கின் ஓட்டையில் நேராக ஊற்றி உடனடியாக அதிகளவு நீரை அந்த ஓட்டை வழியாக ஊற்றி கழுவி விடவும்.
சிங்க் முழுவதும் ஊற்றி நாற்றத்தை ஊருக்கே பரப்ப வேண்டாம். சிங்க் எப்போதும் காலியாக இருந்தால் வீடே தோட்டமாக இருக்கும்.
அவ்வப்போது பாத்திரங்களைக் கழுவி காய வைத்து விடுங்கள். சிங்கில் அதிக நேரம் பாத்திரங்கள் இருந்தால் கிருமி வளர்ப்பான்களாக சிங்க் மாறிவிடும். |