உத்தரபிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டம், சிர்சியா கிராமத்தில் கணவர் திருட்டு வழக்கில் சிக்கியதால், அவரது மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர் கிராம மக்கள்(?).
சிர்சியா கிராமத்தில் வாழ்ந்து வரும் தலித் பெண் பார்பி தேவி. இவரது கணவர் ஒரு திருட்டு வழக்கில் கைதாகியுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தில் இருக்கும் சிலர், பார்பி தேவியை வீட்டில் இருந்து இழுத்து வந்து ஒரு கட்டிலில் வைத்து கட்டினார்கள். பின்னர் கண் மண் தெரியாமல் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.
அவரது தலைமுடியை அறுத்தனர். உடைகளை களைந்து அரை நிர்வாணமாக்கி, தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அந்தப் பெண்ணை மீட்டனர். அவரை சித்ரவதை செய்ததாக 2 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள். |