முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
து‌ப்பா‌க்‌கி‌ச்சுடு‌ம் வீராங்கனை அஞ்சலி பகவத்
விளையாட்டுத் துறையின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் அஞ்சலி பகவத் என்றதும் சட்டென அந்த முகம் நினைவுக்கு வந்துவிடும். ஆம், இந்தியாவின் அர்ஜூனன் என்று புகழப்படும் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அஞ்சலி பகவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.

ஜூடோ மற்றும் கராத்தேயிலும் தேர்ச்சி பெற்றுள்ள அஞ்சலிக்கு புகழ் வாங்கித் தந்தது என்னவோ துப்பாக்கிச் சுடுதல்தான்.

தற்போது 34 வயதாகும் அஞ்சலி பகவத், ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் துப்பாக்கிச் சுடுதலில் முன்னணி வீராங்கனையாகத் திகழ்ந்தார்.

2002ஆம் ஆண்டில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் ஃப் சாம்பியன்ஸ் போட்டியில் பட்டம் வென்றார். இது சாதாரணமாக வென்றெடுத்த பட்டமல்ல... உலகின் தலைசிறந்த துப்பாக்கிச்சுடும் வீரர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு கடும் முயற்சியின் காரணமாகப் பெற்ற பட்டமாகும்.

இவர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி பெற்றதே ஒரு எதிர்பாராத சம்பவமாகும். அதாவது இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது என்.சி.சி.யில் இருந்த பல மாணவர்கள் முக்கியத் தேர்வு காரணமாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அந்த சமயத்தில் போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் சேர்ந்து ஊக்கப்படுத்தியதால் அந்த போட்டியில் அஞ்சலி பங்கேற்றார். இந்த வகையில்தான் துப்பாக்கிச் சுடுதலில் அஞ்சலிக்கு அறிமுகம் ஏற்பட்டது.

இந்தியாவில் மிகச் சிறிய அளவிலான விளையாட்டாகவும், உயர்தட்டு வர்க்க மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த துப்பாக்கிச் சுடுதல் மீது அப்போதுதான் அஞ்சலி பகவத்தின் பார்வை விழுந்தது.

anjali
webdunia photoWD
"அதுவரை எனக்கு துப்பாக்கிச் சுடுதல் பற்றி எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனால் எனக்கு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது, எனக்குள் திறமை இருப்பதை நான் உணர்ந்தேன்" என்று அவர் கூறினார்.
1 | 2  >>  
மேலும்
தாயே தயாராய் இரு
மகளிர் மட்டும்
கடனுக்காக மகள் அபகரிப்பு!
இந்தியாவில் பெண்களின் நிலை
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்
ஜாக்கிரதை: இரசாயன பால்!