2008-09 நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சற்று முன் தாக்கல் செய்தார்.
லாலு பிரசாத் யாதவ் படிக்கத் துவங்கிய உடன் அவர் குறிப்பிடும் முக்கிய அம்சங்களை உடனுக்குடன் உங்களுக்கு தமிழ்.வெப்துனியா.காம் தொகுத்து வழங்கியுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில்...
நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 155 பாதைகள் விரைவில் திறக்கப்படும்.
37 புதிய ரயில் பாதைகள், 5 ரயில் பாதைகள் இரட்டிப்பு பணிகள், 7 ரயில் மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
சாதாரண, விரைவு, அதிவிரைவு ரயில்களில் 50 ரூபாய்க்கு மேற்பட்ட பயணச் சீட்டுகளில் 1 ரூபாய் குறைப்பு.
2011ஆம் ஆண்டிற்குள் சரக்கு கையாளும் திறன் 650 மெட்ரிக் டன்னில் இருந்து 1100 மெட்ரிக் டன்னாக உயர்த்தத் திட்டம்.
சரக்குப் பெட்டிகளை குத்தகை விடுவதற்கு புதிய கொள்கை அறிமுகம் செய்யப்படும்.
ரயில்வேத் துறையில் நிலக்கரி மற்றும் சிமெண்ட் ஆகியவற்றை மொத்தமாக கையாளுவதற்கு 24 மணி நேர நிலையங்கள்.
ரயில்வே தொழில்நுட்பத் துறையை நவீன மயமாக்க ரூ.2,50,000 கோடியில் திட்டம்.
மாநிலங்களின் 50 விழுக்காடு பங்களிப்புடன் 1000 புதிய ரயில்வே மேம்பாலங்கள்.
தாய்-சேய் விரைவு ரயில் என்ற 7 பெட்டிகள் கொண்ட புதிய சிறப்பு ரயில், ராஜீவ்காந்தி அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகம் செய்யப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த மகளிருக்கு பயணக் கட்டணத்தில் 30 முதல் 50 விழுக்காடு சலுகை
மின்சாரத்தை சேமிப்பதற்காக நாடு முழுவதும் ரயில்வேயின் பயன்பாட்டில் உள்ள 6 லட்சம் குண்டு பல்ப்புகள் மாற்றப்படும்.
கேரளாவில் 1000 ஏக்கர் பரப்பளவில் புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலை.
ரயில்வே தனது புதிய திட்டங்களுக்கான நிலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து பெற முடிவு.
நாடு முழுவதும் உள்ள 2,500 பழைய சமிக்ஞை கருவிகள் புதிதாக மாற்றப்படும்.
எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு தனி ரயில் பாதை அமைக்கப்படும்.
16 ரயில்கள் பயண நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
5% கட்டணம் குறைப்பு
முதல் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு பயணக் கட்டணங்களும் 5 விழுக்காடு குறைக்கப்படும்.
50 கி.மீட்டருக்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு பயணக் கட்டணம் 5 விழுக்காடு குறைக்கப்படுகிறது.
பெட்ரோலியப் பொருட்கள் சரக்குக் கட்டணம் 5 விழுக்காடு குறைப்பு
ஏசி கட்டணங்கள் குறைப்பு
முதல் வகுப்பு ஏசி கட்டணம் 7 விழுக்காடு குறைப்பு
இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் 4 விழுக்காடு குறைப்பு
மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் 2 விழுக்காடு குறைப்பு
ரயில்வே கூலிகளை இனி நான்காம் நிலை ஊழியர்கள் என்று அழைக்க வேண்டும்.
செல்பேசிகளின் வாயிலாக ரயில் பயணச் சீட்டு முன்பதிவு திட்டம்
ஸ்மார்ட் கார்ட் மூலம் ரயில் பயணச் சீட்டுகளை அளிக்கும் திட்டம்
சென்னை - சேலம் இடையே தினசரி விரைவு ரயில்
மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவச ரயில் பயணப் பாஸ்
பயணச் சீட்டில் ரயில் வந்து சேரும் உத்தேச நேரமும் குறிக்கப்படும்.
கிழக்கு - மேற்கு மண்டலங்களை இணைக்கும் சிறப்பு சரக்கு ரயில் பாதையுடன் எண்ணூர் துறைமுகம் இணைக்கப்படும்.
நீண்ட தூர அதிவேக ரயில்களில் அடுத்து நிற்கப்போகும் ரயில் நிலையத்தின் பெயர் அறிவிப்புப் பலகையில் காட்டப்படும்.
எல்லா ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த உள்சுற்று கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.
அன்னிய நிறுவனங்களின் உதவியுடன் புதிய சரக்குப் பெட்டிகள் வடிவமைப்புச் செய்யப்படும்.
தற்பொழுதுள்ள ஆளில்லா ரயில் - சாலை சந்திப்புகள் அனைத்தும் ஆட்கள் நியமித்து நிர்வகிக்கப்படும்.
உள்ளூர் ரயில்களில் 12வது வரைப் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகை
இந்த நிதிநிலை அறிக்கையில் புதிதாக 53 ரயில்கள் விடுவதற்கு அனுமதி. இது தவிர 10 ஏழைகள் ரதம்.
மதுரையில் இருந்து மான்மேட் ரயில் நிலையத்திற்கு விரைவு ரயில்.
புதிய ரயில்கள்
ஜபல்புர் - புதுச்சேரி இடையே வாரத்திற்கு ஒரு முறை செல்லும் புதிய ரயில் அறிமுகம்.
வாரணாசி - ராமேஸ்வரம் இடையே புதிய விரைவு ரயில்
வாரணாசி - டெல்லி இடையே வாரத்திற்கு ஒரு முறை ரயில்
பூனா - நாக்பூர் வார விரைவு ரயில்
மாணவிகளுக்கும், அசோகா சக்ரா விருது பெற்றவர்களுக்கும் கட்டணச் சலுகை
5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் தகவல் தொழில்நுட்ப மயமாக்கும் முன்னோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.
|