முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > குடியரசு ‌தின‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மனித உரிமை மீறல்கள் : அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?

மனித உரிமைகள் : நேர்காணல
ஆர். நடராஜ் இ.கா.ப. புலனாய்வு அதிகாரி
மனித உரிமைகள் ஆணையம் - தமிழ்நாடு

தமிழகத்தில் மனித உரிமைகள் பற்றி எந்த அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது?

webdunia photoWD
மக்களிடையே பெரும்பாலும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல் பற்றிய அறிதல் இல்லாமல்தான் மக்கள் உள்ளனர்.

அரசு சாரா மையங்கள், நிறுவனங்கள், படித்தவர்கள் எல்லோரும் இணைந்து பொதுமக்களிடையே தனி மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

மனித உரிமை ஆணையமும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மனித உரிமை ஆணையம் எந்த அளவிற்கு பணியாற்றியுள்ளது?

மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதில் உள்ள முக்கியமான பணி, மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் மத்திய மனித உரிமை ஆணையத்தின் முக்கியப் பணி என்னவென்றால், மக்களிடையே மனித உரிமை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது, மற்ற அமைப்புகளுடனும் இணைந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியப் பொறுப்பு.

அது இரண்டு விதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலர்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி, மற்றொன்று பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்ச்சி.

அரசு அலுவலர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏன் என்றால், மனித உரிமை மீறப்படும்போது, அந்த மனித உரிமை மீறப்பட்டு, அதற்கான நிவர்த்தி நடவடிக்கை அரசு அலுவலர்கள் செய்யாவிட்டால் அதற்கு மனித உரிமை ஆணையம் வந்து நடவடிக்கை எடுக்கும். அதுதான் மனித உரிமை ஆணையத்தின் பணி.

அதனால் அரசு அலுவலர்களுக்கு இந்த மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக மாவட்டம் தோறும் பல விழிப்புணர்ச்சி முகாம்களை நடத்துகிறோம். குறிப்பாக காவல்துறைக்கு.

ஏனென்றால் உயிர், உடமையைப் பாதுகாப்பதில் காவல்துறைக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது. யாருடைய உயிர் அல்லது உடமை பறிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் பணி. அதனால் காவல்துறை ஆணையர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். மனித உரிமை பற்றிய தகவல்களையும், மனித உரிமை மீறல் இருந்தால் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றியும் அறிவுறுத்தப்படுகிறது.

அது தவிர, பொதுமக்களுக்கு தனி மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். நான் பல கிராமங்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தி அதில் பேசியுள்ளேன். அங்கு வரும் மக்கள் மனுக்களைக் கொண்டு வந்து கொடுக்கின்றனர். ஏதாவது ஒரு அரசு அதிகாரி வந்தால் அவரிடம் தங்களது பிரச்சினைகளைக் கூறினால் போதும், அது தீர்ந்துவிடும் என்று எண்ணுகின்றனர். ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் தீர்க்க ஒவ்வொரு துறைகள் உள்ளன. அவர்களுக்கு அந்தந்தத் துறைகள் பற்றிய தகவல்கள் இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்து கொள்ள பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. அதற்கு யாரை சந்திக்க வேண்டும், எந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் இருக்கின்றனர்.

இதுபோன்ற கூட்டங்களை சிறிய நகரங்கள், நகரங்களிலும் நடத்துகிறோம். குறிப்பாக மாணவர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயல்கிறோம். அதற்காக கல்லூரி, பள்ளிகளுக்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அன்றுதான் மனித உரிமைகள் என்னவென்று அறியப்பட்டு வரையறுக்கப்பட்டது. அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் முடிந்து அதில் ஏற்பட்ட சேதங்களை பார்த்து, அழிவுகளைப் பார்த்து மனித உரிமைகளை வரையறுத்தனர். பல நாடுகள் இணைந்து இதுபோன்ற அழிவு இனி ஏற்படக் கூடாது என்று முடிவு செய்து ஒரு 30 சரத்துகள் கொண்ட ஒரு அறிக்கையை கொடுத்தனர்.

அந்த தினம்தான் மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது சுமார் 60 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பல நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்துகிறோம். மாணவர்கள் பங்கேற்கும் கட்டுரைப் போட்கள், பேச்சுப்போட்டிகள் என பல வகையில் அன்றைய தினம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனர்.

மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட பின்னர் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?

இது ஒரு சங்கடமான கேள்வி. மனித உரிமைகள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படுகிறது அல்லது மனித உரிமைகள் மீறப்பட்டால் அதற்கு நிவர்த்தி கிடைக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

அதற்கு மனித உரிமை மீறல் பற்றி வரும் மனுக்களை வைத்து சொல்வதா அல்லது மனுக்கள் குறைந்திருந்தால் விழிப்புணர்ச்சி இல்லை என்று சொல்வதா.
1 | 2 | 3 | 4 | 5  >>  
மேலும்
குடியரசு ‌தின வாழ்த்து அட்டை!
அடிப்படை உரிமை விழிப்புணர்விற்கு கல்வி அவசியம்!
ஏற்றத் தாழ்வைக் களைவோம் : பாபா சாஹேப் அ‌ம்பே‌‌த்கர்!
பெருமைக்குரிய பெரும் தினம்!
எவரெல்லாம் உண்மையான குடிமக்கள்?
கொட்டட்டும் மகளிர் முரசு!